’நோ’ சொன்ன மருத்துவர்கள்..!! ’ஓகே’ சொன்ன நீதிமன்றம்..!! தந்தையின் உயிரைக் காப்பாற்ற சிறுமி செய்த நெகிழ்ச்சி சம்பவம்..!!

தந்தைக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரது 17 வயது மகள் தனது கல்லீரலை தானம் செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கோழலாளியில் தனது மனைவி மற்றும் 17 வயது மகளோடு வசித்து வருபவர் பிரதீஷ். உடல்நலம் பாதித்திருந்த பிரிதீஷ்க்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும் அவர் உடலுக்கு ஏற்ற பொருத்தமான கல்லீரலைப் பொறுத்த முயற்சி செய்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வட்டாரத்தில் மருத்துவ பரிசோதனை செய்தனர். அப்போது யாருடைய கல்லீரலும் பிரதீஷ் உடலுக்கு ஒத்துப்போகவில்லை. அவரின் மகளின் கல்லீரல் மட்டுமே பிரதீஷின் உடல் ஏற்றுக்கொள்ளும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

’நோ’ சொன்ன மருத்துவர்கள்..!! ’ஓகே’ சொன்ன நீதிமன்றம்..!! தந்தையின் உயிரைக் காப்பாற்ற சிறுமி செய்த நெகிழ்ச்சி சம்பவம்..!!

இதனை அறிந்த அந்த 17 வயது சிறுமி தனது கல்லீரலின் ஒரு பகுதியைத் தனது தந்தைக்கு தானம் செய்ய முன்வந்தார். ஆனால், அவர் மைனராக இருப்பதால் உறுப்பு மாற்று சிகிச்சைக்கான சட்டத்தின் படி உறுப்பு தானம் செய்பவரின் வயது 18-க்கு மேல் இருக்க வேண்டும் என்பதால், மருத்துவர்கள் இந்த உறுப்பு மாற்று சிகிச்சையை செய்ய மறுத்து விட்டனர். இந்நிலையில், அந்த மாணவி கேரள உயர்நீதிமன்றத்தில் தனது தந்தையின் உயிரைக் காப்பாற்றத் தனது கல்லீரலை தானம் செய்ய தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கல்லீரலைத் தானம் செய்ய சிறுமிக்கு அனுமதி வழங்கியது. மேலும், தந்தையின் உயிரைக் காப்பாற்ற தனது கல்லீரலை தானம் செய்ய முன்வந்த அந்த சிறுமியை நீதிமன்றம் பாராட்டுவதாக நீதிபதி தெரிவித்தார். இவரை மகளாகப் பெற்ற இவரின் பெற்றோர் கொடுத்து வைத்தவர்கள் என்றும் தெரிவித்தார்.

CHELLA

Next Post

குடித்துவிட்டு பள்ளிக்கு வந்த ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு! பெற்றோர்கள் வெளுத்து வாங்கியதால் பரபரப்பு!

Fri Dec 23 , 2022
பள்ளிக்கும், கல்லூரிகளுக்கும் படிப்பதற்காக வரும் மாணவிகளை உடன் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களோ அல்லது பொது இடங்களில் சமூக விரோதிகளோ பாலியல் ரீதியாக சீண்டினால் ஆசிரியர்களிடம் அது தொடர்பாக தெரிவித்து ஆறுதல் அடையலாம். ஆனால் பாடம் கற்பிக்கும் ஆசிரியரே மாணவிகளிடம் தவறான முறையில் நடந்து கொண்டால் யாரிடம் சொல்வது. சேலம் அருகே சேலம்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 5ம் வகுப்பு வரையில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் சுரேஷ்பாபு. பள்ளி […]
கேள்விக்கு பதிலளிக்காத மாணவன்..!! ஆத்திரத்தில் ஆசிரியர் அடித்ததால் வெடித்து சிதறிய நரம்பு..!!

You May Like