இன்று தேசிய மருத்துவர் தினம்!. முதலமைச்சராக இருந்தபோதும் மருத்துவர் பணி; Dr. பி.சி. ராயின் மகத்தான சேவை!

national doctors day 11zon

ஊசி, மாத்திரையைக் கண்டால் பயப்படாத குழந்தைகளே இருக்க முடியாது. குறும்பு செய்யும் குழந்தைகளிடம், டாக்டரிடம் போய் ஊசி போட்டுவிடுவேன் என்று மிரட்டும் பெரியவர்களும் இருக்கிறார்கள். நம் உடல் நலத்தைப் பாதுகாக்கவே மருத்துவர் ஊசியையும் மாத்திரையையும் அளிக்கிறார் என்பதை அறியும்போது, மருத்துவர்களின் மீது மரியாதை வந்துவிடும்.


மனிதர்களின் வாழ்க்கையில் மருத்துவர்களுக்கு எப்பொழுதுமே உயர்வான இடம் உண்டு. நேரம் காலம் பார்க்காமல், ஓய்வு இன்றி உழைக்கக்கூடியவர்கள் மருத்துவர்கள். கரோனா போன்ற கொள்ளை நோய் காலத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களின் தியாகத்துக்கு ஈடு எதுவும் இல்லை.

உலகின் பல நாடுகளிலும் மருத்துவர்கள் தினம் வெவ்வேறு மாதங்களில் வெவ்வேறு காரணங்களை முன்வைத்து அனுசரிக்கப்படுகிறது. மருத்துவத்தில் சிறந்து விளங்கும் கியூபா, கரோனா நெருக்கடி காலத்தில் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் மருத்துவர்களை அனுப்பிக்கொண்டிருக்கிறது. கியூபாவில் மருத்துவரும் விஞ்ஞானியுமான கார்லோஸ் ஜுவான் ஃபின்லே பிறந்த தினமான டிசம்பர் 3 அன்று மருத்துவர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1886-ம் ஆண்டிலேயே மஞ்சள் காய்ச்சல் கொசு மூலம் பரவுகிறது என்பதைக் கண்டுபிடித்தவர் இவர்.

இந்தியாவில் 1991-ம் ஆண்டிலிருந்து ஜூலை முதல் நாளை தேசிய மருத்துவர்கள் தினமாகக் கொண்டாடி வருகிறார்கள். மருத்துவர்களின் முக்கியத்துவம், பொறுப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மருத்துவத் தொழிலை மேம்படுத்தவும் இந்த நாளைப் பயன்படுத்துகிறார்கள்.

டாக்டர் பிதான் சந்திர ராய் இந்தியாவின் பெருமைக்குரிய மருத்துவ மேதை. மருந்தியல் மற்றும் அறுவை சிகிச்சைக்கான படிப்புகளை ஒரே நேரத்தில் படித்தவர். விடுதலைப் போராட்ட வீரராகவும் இருந்தார். சுதந்திரம் பெற்ற பிறகு மேற்குவங்கத்தின் இரண்டாவது முதலமைச்சராக 14 ஆண்டுகள் பதவி வகித்தார். அப்போதும் ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்தார். இவரது சேவைகளைப் பாராட்டி, 1961-ம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. ராயின் பிறந்த நாளான ஜூலை 1, தேசிய மருத்துவர்கள் தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்தாண்டிற்கான கருப்பொருள்: “முகமூடிக்கு பின்னால்; சிகிச்சையளிப்பவர்களை யார் காப்பாற்றுவார்கள்?” இது சுகாதாரப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் மன மற்றும் உணர்ச்சி சவால்களைப் பற்றிய பிரதிபலிப்பாகும். மருத்துவர்களின் முயற்சிகளை மட்டுமல்ல, அவர்களின் மனிதநேயத்தையும் ஆதரவின் தேவையையும் சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என்று இந்த கருப்பொருள் வலியுறுத்துகிறது.

அதாவது, “ஒவ்வொரு நாளும், மருத்துவர்கள் மற்றவர்களின் உயிருக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள், பெரும்பாலும் தங்கள் சொந்த நலனை புறக்கணிக்கிறார்கள். இந்த ஆண்டின் கருப்பொருள் நம்மைப் பராமரிப்பவர்களை கவனித்துக் கொள்ள நினைவூட்டுவதாகும்,”

மருத்துவத்துறையில் குறிப்பிடத் தகுந்த வகையில் முன்னேற்றங்களைக் கண்டுள்ள இந்தியா, இன்னும் மருத்துவர்களையே பார்த்திராத கிராமங்களுக்கும் சேவை அளிக்க வேண்டியிருக்கிறது. மனித உயிர்களைக் காக்கும் அற்புதமான பணியை மேற்கொண்டு வரும் மருத்துவர்களை இந்த நாளில் நினைவுகூர்வோம். நாம் பார்க்கும் மருத்துவர்களிடம் அன்பையும் நன்றியையும் பகிர்ந்துகொள்வோம்.

Readmore: இதுக்கு எண்டே இல்லையா..? மேலும் 7 தமிழக மீனவர்கள் கைது.. இலங்கை கடற்படையினர் தொடர் அட்டூழியம்..!!

KOKILA

Next Post

ஐடி துறைக்கு ஆப்பு வைக்கும் AI.. 1 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலை இழப்பு..!! என்ன நடக்குது..?

Tue Jul 1 , 2025
செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் மென்பொருள், மனிதவள மற்றும் கிரியேட்டிவ் துறைகள் அதிகம் பாதிப்பு. IBM, Microsoft உள்ளிட்ட நிறுவனங்கள் ஏராளமான பணிநீக்கங்கள் செய்துள்ளன. 2025ஆம் ஆண்டு தொழில்நுட்ப உலகத்திற்கு பெரும் சோதனைக் காலமாகவே அமைந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்ததன் விளைவாக, உலகம் முழுவதும் 1 லட்சத்திற்கும் அதிகமான தொழில்நுட்ப வேலைகள் நீக்கப்பட்டுள்ளன. இந்தத் தகவலை Futurism என்ற பிரபல தொழில்நுட்ப ஊடகம் வெளியிட்டுள்ளது. நிரந்தரமான தொழில்களாகக் […]
ai jobs

You May Like