கண் பார்வை மங்கலாக தெரிகிறதா?… கோவை இலையுடன் இந்த பொருட்களை சேர்த்து டிரை பண்ணுங்க!

கோவை இலையுடன் சமையலறையில் உள்ள சில பொருட்களை வைத்து கண்பார்வை குறைபாட்டை குறைக்கும் வழிமுறைகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.


பார்வைக் குறைபாடு என்பது கண்களில் மூக்குக்கண்ணாடி அணிவது போன்ற வழக்கமான எளிய வழிகளில் சரிசெய்ய முடியாத சிக்கல்களைக் கொண்டிருக்கும் கண்களின் காட்சிக் குறைபாட்டைக் குறிக்கும். பார்வை குறைப்பாட்டு பிரச்சினையானது நபருக்கு நபர் வேறுபடுகிறது. ஒரு சில பேருக்கு தூரப்பார்வை பிரச்சினை இருக்கும், சிலருக்கு கிட்ட பார்வை பிரச்சினை இருக்கும். மேலும் சிலருக்கு கண்களில் தொடர்ந்து நீர் வடிந்துக்கொண்டே இருக்கும். சில பேருக்கு கண்களில் ஏற்படும் அழுத்தத்தினால் பார்வை குறைபாடு ஏற்படும். இவை அனைத்தையும் இந்த நாட்டு மருந்தினால் குணப்படுத்த முடியும்.

மருந்து செய்வதற்கு தேவையான பொருட்கள்: கோவை இலை-1கைப்பிடி அளவு, சீரகம்- 1/2 ஸ்பூன், பன்னீர் ரோஜா-2, சின்ன வெங்காயம்-4. செய்முறை: இவைகளை அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். இக்கலவையை சுத்தமான பருத்திதுணியில் போட்டு இறுக்கிப்பிழிந்து சாற்றை எடுக்க வேண்டும். ஒரு கொள்கலனில் இச்சாற்றை ஊற்றிக்கொள்ளுங்கள்.இதனை தங்கக்குடுவையில் ஊற்றி வைத்தால் கூடுதல் நன்மை தரும். இதனை 15 நாட்களுக்கு ஒருமுறை ஊற்ற வேண்டும் அப்படி ஊற்றினால் கண்பார்வை சரியாகும். கண்ணாடி போட வேண்டிய அவசியம் இருக்காது நீங்கள் கண்ணாடி போடுபவர்களாக இருந்தால் இம்மருந்து ஊற்றுவதன் மூலம் கழற்றிவிடலாம்.

1newsnationuser3

Next Post

நாடு முழுவதும் மொத்தம் 24,24,540 நீர்நிலைகள்...! முதல் முறையாக கணக்கெடுப்பை நடத்திய மத்திய அரசு...!

Mon Apr 24 , 2023
இந்தியாவில் முதன்முறையாக, மத்திய ஜல் சக்தி அமைச்சகம் நாடு முழுவதுமுள்ள நீர்நிலைகள் குறித்த கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. இந்தியாவில் முதன்முறையாக, மத்திய ஜல் சக்தி அமைச்சகம் நாடு முழுவதுமுள்ள நீர்நிலைகள் குறித்த கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. இந்தக் கணக்கெடுப்பு, குளங்கள், ஏரிகள் என இயற்கையாலும் மனிதர்களாலும் உருவாக்கப்பட்ட நீர்நிலைகள் உட்பட இந்தியாவின் நீர் ஆதாரங்களின் விரிவான பட்டியலை வழங்குவதோடு, நீர்நிலைகளின் ஆக்கிரமிப்பு குறித்தத் தரவுகளையும் சேகரித்துள்ளது. நாட்டிலுள்ள அனைத்து நீர்நிலைகளின் விரிவான தரவுகளை […]
water bodies enroachments 1

You May Like