மிகப்பெரிய மோசடி.. மின் கட்டணம் செலுத்தவில்லை என்று மெசேஜ் வந்தால் நம்பாதீங்க.. மின்வாரியம் எச்சரிக்கை..

மின் கட்டணம் செலுத்தவில்லை என்று மெசேஜ் வந்தால் நம்ப வேண்டாம் என்று மின் வாரியம் எச்சரித்துள்ளது.

இந்தியாவில் சைபர் கிரைம் சம்பவங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு நூதுன வழிகளில் சைபர் குற்றவாளிகள் மோசடி செய்து பணத்தை திருடி வருகின்றனர்.. அந்த வகையில் தற்போது மற்றொரு மோசடி அரங்கேறி வருகிறது.. மின்சாரக் கட்டணம் நிலுவையில் இருப்பது தொடர்பாக வாட்ஸ் அப் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் ஒரு செய்தி வருகிறது.. மேலும் மின் கட்டணத்தை உடனடியாக செலுத்தவில்லை எனில், மின் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

b473b87dad558932b9d81434a56d0aac00c4b6de4a9e5d760890229f656f09a9

அந்த செய்தியில் “ அன்புள்ள நுகர்வோரே, உங்கள் முந்தைய மாத மின் கட்டண பில் புதுப்பிக்கப்படாததால் இன்று இரவு உங்கள் மின்சாரம் நிறுத்தப்படும். பில் செலுத்த பின்வரும் இணைப்பைக் கிளிக் செய்யவும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.. பாதிக்கப்பட்டவர் எஸ்.எம்.எஸ்-ல் உள்ள இணைப்பைக் கிளிக் செய்தால், மற்றொரு இணையதள பக்கம் திறக்கும்.. அவர்கள் நிலுவையில் உள்ள மின்சாரக் கட்டணத்தைச் செலுத்துமாறு கேட்கப்படுவார்கள். மின் கட்டணம் செலுத்துவதாக எண்ணி, பலரும் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை உள்ளிடுகின்றனர்.. இதனால் அவர்களின் கணக்கில் இருந்து சைபர்கள் குற்றவாளிகள் நேரடியாக பணத்தை திருடுகின்றனர்..

இந்த மின்கட்டண மோசடி பல மாதங்களாக நடந்து வருகிறது, மேலும் பல பயனர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து சைபர் குற்றவாளிகள் பணத்தை திருடி வருகின்றனர்.. ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் இதுபோன்ற மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்..

நாடு முழுவதும் மின் கட்டண முறைகேடு தொடர்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. டெல்லி, ஜார்கண்ட், மேற்கு வங்காளம், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இந்த மோசடி அதிகரித்துள்ளது.. இந்நிலையில் மின் கட்டணம் தொடர்பான எஸ்.எம்.எஸ் வேகமாக பரவி வருகிறது.. இதுகுறித்து தமிழ்நாடு மின் வாரியம் மக்களை எச்சரித்துள்ளது.. மின் கட்டணம் செலுத்தவில்லை என்பதால் இன்றிரவு மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று தவறான தகவல் பரவுகிறது என்றும்.. எஸ்.எம்.எஸ், வாட்ஸ் அப்-ல் வரும் தகவலை நம்பி ஏமாறவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது..

1newsnationuser1

Next Post

பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்..!! பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்..!!

Mon Feb 6 , 2023
உலகின் பல்வேறு இடங்களில் இருந்து வரும் இயற்கை ஆர்வலர்கள், வரலாற்று ஆர்வலர்கள், சாகச விரும்பிகள் மற்றும் உணவு பிரியர்களுக்கும் 100 சதவீத கனவு இடமாக கோவா உள்ளது. கோவாவில் உள்ள அர்வலேம் குகைகளைப் பற்றி ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும். அர்வலம் குகைகள் பனாஜியில் இருந்து 31 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வடக்கு கோவாவின் சான்கெலிம் கிராமத்தில் அமைந்துள்ளன. இந்த குகைகள் 6 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது என்று […]
பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்..!! பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்..!!

You May Like