”சிக்கன் யாரும் சாப்பிடாதீங்க”..!! பொதுமக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை..!! ஏன் தெரியுமா..?

ஜார்கண்ட் மாநிலத்தில் பரவும் கோழி காய்ச்சலால் மக்கள் பீதியடைந்துள்ளனர். அங்குள்ள போகாரோ மாவட்டத்தின், லோஹஞ்சலில் அமைந்துள்ள அரசாங்க கோழி பண்ணையில் கடந்த 5 நாட்களில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட கோழிகள் பறவைக் காய்ச்சலால் இறந்துள்ளன. கோழிகளின் இறப்பு தொடர்பாக மாவட்ட கால்நடை வளர்ப்புத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. இதற்கிடையே, கோழி இறைச்சி சாப்பிடுவதைத் தவிர்க்குமாறு மக்களுக்கு அம்மாநில அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

bird flu chicken a7050fb6 fe05 11e7 a1cf 7dff4aec86fa

தற்போது இறந்த கோழிகளின் மாதிரிகளை எடுத்து கொல்கத்தா மற்றும் மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையில் அனைத்து கோழிகளுக்கும் பறவை காய்ச்சல் இருந்தது உறுதி செய்யப்பட்டது. அரசு கோழி பண்ணைகளில் 2 வகையான கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த 2 இனங்களிலும் கோழிகளின் இறப்பு காணப்படுவதால், அனைத்து கோழி பண்ணைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

CHELLA

Next Post

ஓபிஎஸ் தாயாருக்கு திடீர் உடல்நலக்குறைவு..!! தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..!!

Thu Feb 23 , 2023
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வசித்து வரும் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் ஓ.பழனியம்மாள் (95) வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்ததன் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனை அறிந்த ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனை சென்று தாயின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டிற்கு […]
OPs 1

You May Like