உங்க பர்ஸில் மறந்து கூட இந்தப் பொருட்களை வைக்காதீர்கள்!. பணம் சேரவே சேராது!.

money purse 11zon

பர்ஸில் வைத்திருக்கும் பணம் மென்மேலும் அதிகரிக்க வேண்டும் என்று நாம் எண்ணுவோம். அதற்கு இயற்கையான முறையில் வாசனை தரக்கூடிய கிராம்பு, ஏலக்காய், ஜவ்வாது, பச்சை கற்பூரம் ஆகியவற்றில் ஏதேனும் வைக்கும்போது அது பணத்தை நமக்கு ஈர்த்துத் தரும் என்று சொல்லப்படுகிறது.


பர்ஸில் அதிகமாகக் கடன் ரிசிப்ட் வைத்திருக்கிறீர்கள் என்றால், அது மேலும் கடன் அதிகமாக வாங்கும் சூழலை அதிகரிக்கும். நீங்கள் பணம் வைத்திருக்கும் பர்ஸில் மெடிக்கல் பிரிஸ்கிரிப்ஷனை வைத்திருக்காதீர்கள். நோய் சம்பந்தமான விஷயங்களை அது அதிகமாக ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது.

பர்ஸில் வரவு சம்பந்தமான பில்ஸை வைத்திருக்கலாம். Salary pay slip, Bank mini statement போன்றவற்றை வைத்திருக்கலாம். இதெல்லாம் பண வரவை தரக்கூடியதாகும். பர்ஸில் நம் அன்புக்குரியவரின் புகைப்படத்தை வைத்திருப்போம். அந்த புகைப்படம் கசங்கி, கிழிந்து இருந்தால் அது நெகட்டிவ் எனர்ஜியாக மாறி பலவித சங்கடங்களையும், பிரச்னைகளையும் உண்டாக்கும் என்று சொல்லப்படுகிறது.

பணம் வைத்திருக்கும் பர்ஸில் Safety Pin, hair pin போன்றவற்றை வைக்காதீர்கள். அப்படி வைத்தால் அது பண வரவை பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது.இந்த அளவிற்கு முக்கியமான பொருட்கள் வைத்திருக்கும் பர்ஸ் கிழிந்திருக்கக் கூடாது. அத்தகைய நீட்டாக இருக்கும் பர்ஸை வைத்திருக்க வேண்டும். பர்ஸில் வைத்திருக்கும் ரூபாய் நோட்டுக்களை கவனமாகக் கையாள வேண்டும். நம் பர்ஸில் இருக்கும் பணம் கசங்காமல், கிழியாமல் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். அதனால் செல்வம் அதிகரிக்கும்.

பர்ஸை நம் வீட்டில் வைக்கும்போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைக்க வேண்டும். பர்ஸை வெளியில் செல்லும்போது கண்ட இடத்தில் எடுத்து வைக்காதீர்கள். அவ்வாறு வைக்கும்போது அந்த இடத்தில் உள்ள வைப்ரேஷன் பர்ஸில் பட்டு பண வரவைக் குறைக்கும்.

மேலும் வீட்டிற்கு வந்ததும் பர்ஸை அலட்சியமாக தூக்கி எறியாதீர்கள். அதில்தான் நம்முடைய பணத்தை வைத்திருப்போம். அத்தகைய பர்ஸை தூக்கி எறியும்போது மகாலக்ஷ்மியை அவமதிப்பதுப் போல ஆகிறது. நீங்கள் கைராசி என்று நினைக்கும் நபரிடம் பணம் சிறிது வாங்கி பர்ஸில் வைத்திருப்பது பணம் மென்மேலும் பெருகுவதற்கு உதவும்.

Readmore: ஆபரேஷன் சிந்தூர் ரகசியங்கள் கசிவு..? யூடியூபர் சன்னி யாதவ் சென்னையில் கைது..!! – NIA அதிரடி

1newsnationuser3

Next Post

குட் நியூஸ்...! தனிமனைகளை இணையவழி மூலம் விண்ணப்பித்து வரன்முறைப்படுத்த அனுமதி...!

Sat May 31 , 2025
அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் விற்கப்பட்ட தனிமனைகளை இணையவழி மூலம் விண்ணப்பித்து வரன்முறைப்படுத்த அனுமதி தமிழக அரசு அரசாணை வெளியீடு. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் அனுமதியற்ற மனைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு அதில் குறைந்தபட்சம் ஒரு மனையாவது விற்கப்பட்டு அதற்கான விற்பனைப்பத்திரம் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்டிருப்பின் அந்த மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனைகள் மற்றும் […]
Tn Government registration 2025

You May Like