’தொகுதி மக்களின் மனுக்களை பிக்பாஸில் வைத்து தீர்க்கலாமென நினைக்க வேண்டாம்’..! – வானதி சீனிவாசன்

கமல்ஹாசனுக்கு இப்போதுதான் கோவை தெற்கு தொகுதி ஞாபகம் வந்துள்ளதாகவும், தொகுதி மக்களின் மனுக்களை வாங்கிக் கொண்டு அதனை பிக்பாஸில் வைத்து தீர்க்கலாம் என நினைக்க கூடாது என்றும் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.


கோவை மாவட்டம் சிவனந்தகாலனி பகுதியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், பிரதமர் மோடியின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்று நடுதல் மற்றும் தூய்மை பணியில் ஈடுபட்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், ”தெற்கு தொகுதியில் உள்ள அங்கன்வாடி மையங்களை எல்லாம் சீரமைத்து அவர்களுக்கு செய்ய வேண்டிய உதவிகள், அவர்களுடைய வேண்டுகோளின் படி அரசாங்கத்திடம் கேட்க வேண்டிய உதவிகள் என ஒவ்வொரு அங்கன்வாடி சார்பாக நாங்கள் திட்டமிட்டு இருக்கிறோம். அந்த வகையில், ஒவ்வொரு அங்கன்வாடியாக இந்த வரக்கூடிய நான்கு மாதத்தில் மகளிர் அணி சார்பாக நாங்கள் திட்டமிட்டு இருக்கிறோம்” என்றார்.

’தொகுதி மக்களின் மனுக்களை பிக்பாஸில் வைத்து தீர்க்கலாமென நினைக்க வேண்டாம்’..! - வானதி சீனிவாசன்

நடிகர் கமல்ஹாசன் தெற்கு தொகுதியில் மக்களை சந்தித்து மனுக்களை பெற்று வரும் கேள்விக்கு பதிலளித்த அவர், “ஒரு வருடம் கழித்து இப்போதான் தொகுதி ஞாபகம் வந்திருக்கிறது போல, மனுக்கள் வாங்கலாம், வாங்கிக் கொண்டு சென்று அதனை பிக்பாஸில் வைத்து தீர்க்கலாம் என நினைக்க கூடாது. மக்களுக்கு சேவை செய்யனும் என்றால் நேரடியாக களத்தில் நின்று செய்யலாம். அதனை மக்கள் கிட்ட சொல்லட்டும். இப்போது தெற்கு தொகுதியை ஞாபகம் வைத்து வந்தது நல்ல விஷயம்” என்றார்.

’தொகுதி மக்களின் மனுக்களை பிக்பாஸில் வைத்து தீர்க்கலாமென நினைக்க வேண்டாம்’..! - வானதி சீனிவாசன்

மேலும், ”ஆ.ராசாவின் பேச்சை முதலமைச்சர் முக.ஸ்டாலின் ஆதரிக்கிறாரா? அவரின் இந்த பேச்சை திமுக ஒத்துக்கொள்கிறதா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். முன்னாள் அமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசாசட்டத்திற்கு எதிரான வகையில் பேசி இருக்கிறார். அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென பாஜக சார்பில் புகார்கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இம்மாதிரியான பேச்சுகளை முதலமைச்சர் மவுனமாக வேடிக்கை பார்ப்பதை, ரசிப்பதை நாங்கள் கண்டிக்கிறோம். அவர் இதற்கென்ன உரிய விளக்கத்தை அளிப்பார் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.

இன்று சமூக நீதி நாள் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. உண்மையான சமூக நீதி நாள் என்றால் பிரதமரின் பிறந்தநாளைத்தான் சமூகநீதி நாளாக கொண்டாட வேண்டும். ஏனென்றால் பெரியார் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு என்ன கனவு கண்டாரோ அதனை பிரதமர் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். பெரியார் இருந்திருந்தால் பிரதமரின் பிறந்தநாளைத்தான் சமூக நீதி நாளாக கொண்டாடப்பட வேண்டுமென கூறியிருப்பார்”. இவ்வாறு அவர் பேசினார்.

https://youtu.be/_fKr93QXsIM
Subscribe to my YouTube Channel

CHELLA

Next Post

CWC அஸ்வின், டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து..! பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் லிஸ்ட் வந்தாச்சு..!

Sun Sep 18 , 2022
பிக்பாஸ் சீசன் 6ல் போட்டியாளர்களாக களமிறங்கப்போகும் பிரபரலங்களின் பட்டியல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் இன்னும் சில நாட்களில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. எப்போதும் போல இந்த சீசனும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில், இந்நிகழ்ச்சியின் ப்ரோமோக்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும், பிக்பாஸ் சீசன் 6இல் எந்தெந்த பிரபலங்கள் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற கருத்து கணிப்பு […]
CWC அஸ்வின், டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து..! பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் லிஸ்ட் வந்தாச்சு..!

You May Like