எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்ற நிலையில், தற்சமயம் யோனா என்ற செல்போன் செயலியை பயன்பாட்டிற்காக வைத்திருக்கிறது. இந்த செயலி வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் எஸ்பிஐ வங்கி தன்னுடைய யோனா செல்போன் செயலியை புதுப்பித்து பல்வேறு புதிய வசதியுடன் அறிமுகம் செய்திருக்கிறது இதில் யு.பி.ஐ பரிவர்த்தனை வசதிகள் மேம்படுத்தப்பட்டிருக்கிறது.
யு.பி.ஐயின் மூலமாக அடுத்தவர்களுக்கு பணத்தை அனுப்ப ஸ்கேன் செய்து பணத்தை செலுத்திக் கொள்ளலாம். அதோடு மட்டுமல்லாமல் புதிய வங்கி கணக்குகளை இந்த செயலியின் மூலமாக மிக எளிதாக தொடங்கி விடலாம் கடன் வசதிகளும் இதில் காணப்படுகிறது. வீட்டு கடன் தனிநபர் கடன் உள்ளிட்ட கடன்களும் இந்த செயலியின் மூலமாகவே விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.