ஈரோட்டில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், மீண்டும் நமது திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் அமையும் என்று தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் திமுக ஆட்சியில் உழவர் நலன் காக்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக பெருமிதம் தெரிவித்தார். மேலும் “ வேளாண் இயந்திரங்கள் வாங்க மானியம், வேளாண் வாடகை மையங்கள் அமைக்க மானியம் தருகிறோம். சிறுதானிய இயக்கம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். சிறுதானிய உற்பத்தியில் தமிழ்நாடு தான் இந்தியாவில் முதலிடம் உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் உணவு தானிய உற்பத்தி அதிகரித்துள்ளது. அத்திக்கடவு – அவிநாசி திட்டம் தொடங்கப்பட்டு, 1045 ஏரிகள், குளங்கள் வளம் பெற்றுள்ளது.
இலவச மின்சாரத்திற்கு மட்டும் ரூ.26,232 கோடி செலவிடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு பார்த்து பார்த்து செய்வதால் வேளாண்மை பெருகி உள்ளது. இவை தவிர ஏராளமான சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம்.. உழவர் சந்தைகளை புதுப்பித்து புதிய உழவர் சந்தைகளை உருவாக்கி இருக்கிறோம்.. ஈரோட்டில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. பவானி ஆற்றில் 8 தடுப்பணைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் ரூ.1000 ஆக உயர்ந்த ஓய்வூதிய தொகை, ரூ.1200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
வேளாண் பொருட்களுகான அனைத்து விவரங்களையும் இந்த கண்காட்சியில் தெரிந்து கொள்ளலாம்.. உழவு என்பது தொழில் அல்ல. அது நம் பண்பாடு. வளமான பயிர்களுக்கு இடையே களைகள் முளைக்கும்.. அதே போல் தான் கடந்த கால அதிமுக ஆட்சி இருந்தது. விவசாயிகளுக்கு ஒரு பிரச்சனை எனில், முதல் ஆளாக துணை நிற்பவன் நான் தான். தோளில் பச்சை துண்டு போட்டு வேஷம் போடும் போலி விவசாயிகள் நாங்கள் இல்லை.
எல்லா வகையில் விவசாயிகளுக்கு துரோகம் செய்த ஆட்சி அதிமுக ஆட்சி. கடந்த ஆட்சியில் தற்கொலைகள் அதிகரித்தது. 3 வேளாண் சட்டங்களை ஆதரித்து பச்சை துரோகம் செய்தவர்கள் தான் அதிமுகவினர். அதனால் அவர்களை நீங்கள் தோற்கடித்தீர்கள். மீண்டும் நமது திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் அமையும்.. அதற்கு உழவர்கள் அனைவரும் துணையாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
Read More : திமுக கூட்டணி விரைவில் உடையும்… ஒரு கட்சி ரெடியா இருக்கு.. புது குண்டை தூக்கிப் போட்ட எல். முருகன்..