ஓட்டுநர், நடத்துனர் காலிப்பணியிடங்கள்..!! தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாடு அரசு கடந்த 14ஆம் தேதி, அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்கள் மற்றும் தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) நிறுவனத்தில் காலியாக உள்ள 122 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணையை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இருந்து தகுதிவாய்ந்த நபர்களின் மூப்பு பட்டியலை, ஓட்டுநர் உடன் நடத்துநர் பணியிடங்களுக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் பெறுவார் என்றும், ஓட்டுநர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் மேலாண் இயக்குநர் பெறுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில், இந்த பதவிக்கு விண்ணப்பிக்க வரும் 28ஆம் தேதி கடைசி தேதி என்றும், ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டுமென சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், போக்குவரத்துக் கழகங்கள் இதுநாள் வரையில் செய்தித்தாளில் விளம்பரம் செய்து ஆன்லைன் விண்ணப்ப செயல்முறையைத் தொடங்கவில்லை என்று கூறப்படுகிறது. தேர்வர்கள், அவ்வப்போதைய நிலவரங்களை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் கும்பகோணம் இணையதளத்திலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் அறிந்து கொள்ளலாம். மேலும், விவரங்களை அறிந்து கொள்ள, உங்கள் அருகில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம்.

CHELLA

Next Post

தம்பியை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற அண்ணன்..!! உடலை செப்டிக் டேங்கில் பதுக்கிய பயங்கரம்..!!

Mon Feb 27 , 2023
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த கீழ்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சென்னகிருஷ்ணன் (68). இவரது மகன்கள் ஏழுமலை (47). திருமலை (44). ஏழுமலையின் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். திருமலைக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஏழுமலையும், தம்பி திருமலையும் கீழ்குப்பம் கிராமத்தில் அருகருகே வசித்து வந்தனர். இருவரும் மதுகுடித்துவிட்டு, அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதேபோல், சம்பவத்தன்று இரவும் 11 மணியளவில் ஏழுமலை, திருமலை ஆகிய இருவருக்கும் மதுபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. […]
crime scene murder 1

You May Like