இ-காமர்ஸ் நிறுவனங்கள் இனி சுய தணிக்கை அறிக்கை தாக்கல் செய்வது கட்டாயம்…! மத்திய அரசு அதிரடி

Central 2025

மின்னணு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள 26 முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்கள் சுய தணிக்கை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.


நுகர்வோர் நலனைப் பாதுகாக்கும் வகையில் மின்னணு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள 26 முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்கள் அது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளின்படி அனைத்து இணக்க நடைமுறைகளும், முறையாக பின்பற்றப் படுவதை உறுதி செய்வதற்கான சுய தணிக்கை உறுதி மொழிக் கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் இது போன்ற நடவடிக்கைகள், ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் நுகர்வோருக்கு தவறான தகவல்களை அளிப்பதிலிருந்தும், அல்லது முறைகேடுகளில் ஈடுபடுவதிலிருந்தும் தடுப்பதற்கான முக்கிய முயற்சியாக கருதப்படுகிறது.மின்னணு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் குறித்து அடையாளம் காணவும் மதிப்பீடு செய்யவும் முறைகேடுகள் குறித்தும் அறிந்து கொள்ள ஏதுவாக சுயதணிக்கை அல்லது மூன்றாம் நபரின் தணிக்கை நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து 26 நிறுவனங்களும் இதில் மறைக்கப்பட்ட அல்லது முறைகேடான அல்லது தவறான தகவல்கள் எதுவும் இடம் பெறவில்லை என்பதை உறுதி செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ஓய்வு வேண்டுமென்றால் ஐபிஎல்லைத் தவிர்க்கவும்!. சுப்மன் கில்லை சாடிய கம்பீர்!

Fri Nov 21 , 2025
செப்டம்பரில் நடந்த ஆசியக் கோப்பைக்குப் பிறகு சுப்மன் கில் இடைவிடாமல் விளையாடி வருகிறார். மற்ற வீரர்கள் வெவ்வேறு வடிவங்களில் மாற்றப்பட்டாலும், கில் தற்போது டி20 துணை கேப்டனாகவும், ஒருநாள் போட்டித் கேப்டனாகவும் உள்ள அவர், கடந்த ஒரு மாதமாக நான்கு தொடர்களிலும் இடம்பெற்றுள்ளார். கடந்த வாரம் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இந்தப் போட்டியின் 2வது நாளில் […]
Gambhir gill

You May Like