மின் துறையில் வேலைவாய்ப்பு..! 10-ம்‌ வகுப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கவும்…!

தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இந்த Electrician பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதி மத்திய அல்லது மாநில அரசு கல்வி நிலையங்களில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணியில் சேருவதற்கு முன் அனுபவம் எதுவும் தேவையில்லை. பணிக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.9,500 வரை ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பத்தாரர்கள் வயது இருக்க வேண்டியது அவசியம் இல்லை.

பணிகளுக்கு மொத்தம் 10 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணி வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணிகளுக்கு வேறு ஏதாவது விவரங்கள் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Info: https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/6226e4afeb150a3a951bb304

Vignesh

Next Post

ஒரு லிட்டர் டீசல் ஊற்றினால் ரயில் எத்தனை கிலோ மீட்டர் ஓடும்..? பலருக்கும் தெரியாத உண்மை..!!

Tue Mar 28 , 2023
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பேருந்து, ரயில், விமானம் போன்ற பொது போக்குவரத்து வாகனங்கள் எத்தனை கிலோ மீட்டர் மைலேஜ் தரும் என்கிற விவரங்கள் பலருக்கும் தெரியாது. இதுபற்றி யாரும் அவ்வளவாக யோசித்திருக்க மாட்டார்கள். அதாவது ஒரு லிட்டர் எரிபொருளை உட்கொண்டால் ஒரு வாகனம் எவ்வளவு தூரம் பயணிக்கும் என்பதுதான் மைலேஜ் என்ற சொல்லுக்கு விளக்கம். அந்தவகையில், ரயிலின் மைலேஜ் பல காரணிகளைப் பொறுத்து அமையும். ஒரு ரயில் இத்தனை கிலோ […]
Train 1 1

You May Like