தஞ்சாவூர் அருகே….! லாரியிலிருந்து இறக்கியபோது மது பாட்டில்களை திருடி சென்ற இளைஞர்கள் காவல்துறை தீவிர விசாரணை……!

தஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மதுபான கிடங்கில் இருந்து லாரிகள் மூலமாக மயிலாடுதுறை மாவட்டம் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மது பாட்டில்கள் கொண்டு செல்வது வழக்கம்.

அந்த விதத்தில் மயிலாடுதுறை மகாதான தெருவில் இருக்கின்ற டாஸ்மாக் கடைக்கு நேற்று முன்தினம் மாலை லாரியில் மது பாட்டில்கள் கொண்டு செல்லப்பட்டனர். அதனை ஊழியர்கள் லாரியில் இருந்து இறக்கி வைத்து கடைக்குள் எடுத்துச் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது கடை நுழைவாயிலின் அருகே சாலை ஓரத்தில் நின்று கண்காணித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் 2️ பேர் கண்ணிமைக்கும் சமயத்தில் 48 மது பாட்டில்கள் அடங்கிய ஒரு அட்டை பெட்டியை எடுத்துச் சென்று இருசக்கர வாகனத்தில் வைத்து வேகமாக சென்றுவிட்டனர். ஊழியர் ஒருவர் ஓடிச் சென்று அவர்களை பிடிக்க முயற்சி செய்தும் முடியாமல் போயிற்று. திருடி சென்ற மது பாட்டில்களின் ஒட்டுமொத்த விலை 6140 என்று சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் சுரேந்திரன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வழங்கிய புகாரை அடிப்படையாகக் கொண்டு, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 2 இளைஞர்களையும் தீவிரமாக தேடி வருகின்றன.

அதோடு இளைஞர்கள் மது பாட்டில்களை திருடிச்செல்வது அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறது. அந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Next Post

சென்னை கீழ்ப்பாக்கத்தில் இளைஞர் படுகொலை…..! 2 பேர் கைது…..!

Mon May 22 , 2023
சென்னை கீழ்ப்பாக்கம் குட்டியப்பன் தெருவை சேர்ந்தவர் கருணா(26). சன்னியாசிபுரம் பிரதான சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார் அப்போது அவரை வழிமறித்து 5 பேர் கொண்ட கும்பல் திடீரென்று அவர் மீது தாக்குதல் நடத்தி அவரை கொலை செய்து விட்டு தப்பி சென்றது. இது தொடர்பாக தகவல் அறிந்து தலைமை செயலக காலனி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில், விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் […]

You May Like