திமுகவை வெற்றி பெற வைக்கவே, ஜெயலலிதாவின் தொண்டர்களைப் எடப்பாடி பழனிசாமி பலவீனப்படுத்தி வருகிறார் என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்..
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா நேற்று அதிமுக சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.. அதிமுக முக்கிய தலைவர்கள் பலரும், ஜெயலலிதா படத்திற்கு மரியாதை செலுத்தினர்.. அந்த வகையில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தனித்தையே மரியாதை செலுத்தினர்.. அதே போல் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் ஜெயலலிதா படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்..
அமமுக சார்பில் தேனியில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டத்தில் டிடிவி தினகரன் கலந்துகொண்டு உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ ஜெயலலிதா என்னை தேனியில் இருந்து தான் அறிமுகம் செய்தார்.. நான் இந்து போட்டியிட்ட நாடாளுமன்ற தேர்தலில் அதிகபட்ச வாக்குகள் பெற்று வெற்றி பெற்றேன்.. சிலரின் அரசியல் சதியால் 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். வரும் மக்களவை தேர்தலில் அந்த சதித் திட்டத்தை முறியடித்து, நிச்சயம் வெல்வோம். நமது வெற்றியை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.
துரோகம் மட்டுமே செய்து பொதுச்செயலாளர் பதவியை பெற்றுள்ளனர்.. எம்ஜிஆரின் ஆன்மாவும், ஜெயலலிதாவின் ஆன்மாவும் கண்டிப்பாக இதை மன்னிக்கவே மன்னிக்காது… காலம் மாறும்.. அப்போது காட்சிகளும் மாறும். எடப்பாடிக்கு விரைவில் பாடம் கற்பிப்போம். இப்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் திமுகவை வெற்றி பெற வைக்க எடப்பாடி செயல்பட்டு வருகிறார். இதற்காகவே எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் தொண்டர்களைப் பலவீனப்படுத்தி வருகிறார். எடப்பாடிக்கு திமுக போட்டியே இல்லை. நானும் ஓ பன்னீர்செல்வமும் தான் போட்டி.
எடப்பாடி பழனிசாமியால் இரட்டை இலை சின்னத்தை வைத்து ஏமாற்ற முடியாது. பொதுமக்கள் நிச்சயம் தூக்கி எரிந்துவிடுவார்கள். அப்போது நாம் மீட்டெடுப்போம்.. உண்மையான தொண்டர்கள் யாருமே அங்கு இல்லை.. உண்மை தொண்டர்கள் எங்கள் பின்னால் தான் இருக்கிறார்கள். ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை அமமுக தான் நிச்சயம் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவரும்” என்று தெரிவித்தார்.