கல்வி உதவித்தொகை இருமடங்காக உயர்வு..!! அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இருமடங்காக உயர்த்தப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.


தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமூக நலத்துறை, மகளிர் உரிமைத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பல்வேறு புதிய அறிவிப்புகளை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டார். அதன்படி, உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் கட்டப்படும் வணிக வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% ஒதுக்கீடு வழங்கப்படும் என்றார். இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். உயர்கல்வி பயிலும் பார்வை மாற்றுத்திறன் மாணவர்களுக்கு தலா 14,000 ரூபாய் மதிப்பீட்டில் நவீன வாசிக்கும் கருவி வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு இல்லங்களில் பணியாற்றும் 1,011 பேரின் மதிப்பூதியம் இரண்டு மடங்காக உயர்த்தப்படுவதாகவும் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 700 குழந்தைகள் மையங்களுக்கு எல்இடி தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்படும் என்றும் 17,312 அரசுப்பள்ளிகளின் சத்துணவு மையங்களுக்கு புதிய சமையல் உபகரணங்கள் வழங்கப்படும் என்றும்அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்தார். நீலகிரி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் குழந்தைகளுக்கு ஸ்வட்டர், தொப்பி, கால் உரை வழங்கப்படும். திருச்சி, கோவை மற்றும் சென்னையில் குழந்தைகளுக்கான போதை தடுப்பு மையங்கள் 1 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று கூறினார்.

CHELLA

Next Post

இந்தியாவில் மார்ச் மாதம் பணவீக்க விகிதம் 1.34 சதவீதம்...! மத்திய அரசு தகவல்...!

Tue Apr 18 , 2023
இந்தியாவில் மொத்த விற்பனை விலை குறியீட்டு எண் அடிப்படையில் ஆண்டு பணவீக்க விகிதம் 1.34 சதவீதமாகும். 2023, மார்ச் மாதத்தில் இந்தியாவில் மொத்த விற்பனை விலை குறியீட்டு எண் அடிப்படையில் ஆண்டு பணவீக்க விகிதம் 1.34 சதவீதம் ஆகும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது 2023 பிப்ரவரி மாதத்தில் 3.85 சதவீதமாக இருந்தது.  அடிப்படை உலோகங்கள், உணவுப் பொருட்கள், ஜவுளிகள், உணவு அல்லாதப் பொருட்கள், கனிம வளங்கள், ரப்பர் […]

You May Like