நெருங்கும் தேர்தல்..!! முன்னாள் முதலமைச்சருக்கு உடல்நலக்குறைவு..!! மருத்துவமனை நிர்வாகம் முக்கிய அறிக்கை..!!

கர்நாடக முன்னாள் முதல்வரும் ஜேடிஎஸ் தலைவருமான குமாரசாமி திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கர்நாடக மாநிலத்தில் இன்னும் சில வாரங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்கே பாஜக, காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தேர்தல் கருத்துக் கணிப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி வந்து கொண்டிருக்கிறது. தொங்கு சட்டசபை அமைந்தால் நிச்சயம் ஜேடிஎஸ் கட்சி கிங் மேக்கராகவே மாறும். இதனால் ஜேடிஎஸ் மீதான கவனம் அதிகரிக்கவே செய்துள்ளது.

இந்த சூழலில் கர்நாடக முன்னாள் முதல்வரும் ஜேடிஎஸ் தலைவருமான குமாரசாமி திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குமாரசாமி உடல்நிலை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் அவர் விரைவாகக் குணமடைந்து வருவதாகவும்

இதுகுறித்து மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், ”குமாரசாமி 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி மாலை, மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சோர்வு மற்றும் பலவீனம் போன்ற அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தேவைப்படும் அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவர் விரைவாகக் குணமடைந்து வருகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CHELLA

Next Post

’யாராச்சும் காப்பாத்துங்க’..!! கிணற்றில் இருந்து கேட்ட குரல்..!! ஓடிவந்த மக்கள்..!! விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!

Sun Apr 23 , 2023
ஈரோடு மாவட்டம் கோபி அருகே அந்தியூர் அத்தாணி என்ற பகுதியில் கிருஷ்ணமூர்த்தி (55) – ரேணுகாதேவி (42) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களது மகன் கார்த்தி (21) பொக்லைன் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர்கள் 3 பேரும் சில ஆண்டுகளாக ஒத்தப்பனை மேடு பகுதியில் உள்ள கிருஷ்ணமூர்த்தி என்பவரது தோட்டத்து வீட்டில் குடியிருந்து வந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை அவர்கள் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் இருந்து, காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்.. […]

You May Like