நேபாளத்தில் அடுத்த ஆண்டு மார்ச் 5ம் தேதி தேர்தல்!. அதிபர் ராம் சந்திர பவுடல் அறிவிப்பு!

nepal election

வன்முறைக்கு மத்தியில் நேபாளத்தில் அடுத்த ஆறு மாதங்களுக்குள் தேர்தல்கள் நடத்தப்படும் என்று அதிபர் ராமச்சந்திர பவுடல் அறிவித்தார்.


இந்தியாவின், அண்டை நாடான நேபாளத்தில், சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்தும், ஊழலை கண்டித்தும் தலைநகர் காத்மாண்டு உட்பட பல்வேறு நகரங்களில் இளைஞர்கள் மாபெரும் போராட்டம் நடத்தினர். இது வன்முறையாக மாறிய நிலையில், பார்லி., கட்டடத்துக்கு தீ வைக்கப்பட்டது. மேலும் அரசு அலுவலகங்களும் சூறையாடப்பட்டன. நிலைமை கை மீறி போனதை அடுத்து, பிரதமர் பதவியை கே.பி.சர்மா ஒலி ராஜினாமா செய்தார். தொடர்ந்து அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த வன்முறையில், 51 பேர் உயிரிழந்தனர்; 1,300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதற்கிடையே, நேபாளத்தின் இடைக்கால பிரதமராக அந்நாட்டின் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி நேற்று முன்தினம் பதவியேற்றார். தொடர்ந்து, நேபாள பார்லி., கலைக்கப்பட்டது . இந்நிலையில், நேபாளத்தில் அடுத்தாண்டு மார்ச் 5ல், பார்லி., பொதுத்தேர்தல் நடக்கும் என்றும், அதுவரை, சுசீலா கார்கி இடைக்கால பிரதமராக பதவி வகிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும். “கடினமான மற்றும் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு, நாட்டின் மிகவும் சங்கடமான, விரோதமான மற்றும் பயமுறுத்தும் சூழ்நிலையில் அமைதியான தீர்வு காணப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டம் பாதுகாக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அமைப்பு பாதுகாக்கப்பட்டுள்ளது. கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசு நிறுவப்பட்டுள்ளது. பிரதிநிதிகள் சபைக்கான தேர்தல்களை 6 மாதங்களுக்குள் நடத்துவதன் மூலம் மக்கள் மிகவும் மேம்பட்ட ஜனநாயகத்தின் பாதையில் முன்னேற வாய்ப்பு கிடைத்துள்ளது” என்று அதிபர் கூறினார்.

முன்னதாக, சனிக்கிழமை மாலை, நாடு முழுவதும் நடந்த ஊழல் எதிர்ப்புப் போராட்டங்களின் போது உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், நேபாள குடிமக்கள் பவுத்தநாத் ஸ்தூபிக்கு வெளியே கூடி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். அனைத்து தரப்பு மக்களும், மாணவர்கள், துறவிகள், ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் மெழுகுவர்த்திகளை ஏற்றி, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒற்றுமையைக் காட்ட மௌன அஞ்சலி செலுத்தினர்.

இதற்கிடையில், நேபாள காங்கிரஸ் எம்பி அபிஷேக் பிரதாப் ஷா சனிக்கிழமை கபில்வஸ்து தலைமை மாவட்ட அதிகாரி தில்குமார் தமாங் மூலம் நேபாள முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலிக்கு எதிராக நியூ பனேஷ்வர் போலீசில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தார்.

Readmore: குளியலறையில் துண்டு உள்ளிட்ட இந்த பொருட்களை வைக்காதீர்கள்!. பெரிய இழப்பை ஏற்படுத்தும்!.

KOKILA

Next Post

வைகை ஆற்றில் "உங்களுடன் ஸ்டாலின்" மனுக்கள் மிதந்த விவகாரம்...! ஒருவர் அதிரடியாக கைது...!

Sun Sep 14 , 2025
வைகை ஆற்றில் மனுக்கள் மிதந்த விவகாரம் தொடர்பாக நில அளவை துறை உதவி வரைவாளர் கைது செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் ஆக. 29-ம் தேதி காலை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மனுக்கள் மிதந்தன. இதுகுறித்து சிவகங்கை கோட்டாட்சியர் விஜயகுமார் விசாரணை நடத்தினார். அதனடிப்படையில், திருப்புவனம் வட்டாட்சியர் விஜயகுமார் இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும், அலட்சியமாகப் பணிபுரிந்த 7 அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. திருப்புவனம் […]
vaigai 2025

You May Like