இனிமே மின்சார கட்டணம் தாறுமாறாக உயராது.. தமிழ்நாடு அரசின் மாஸ்டர் பிளான்..!! அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தகவல்..

Electricity EB Bill 2025

தமிழக மின்வாரியத்தின் மின்சார விநியோகத்தை மேம்படுத்த புதிய மின்மாற்றிகள் மற்றும் துணை மின் நிலையங்களை அமைப்பதில் நிதி வழங்கும் செயல்முறை மத்திய அரசின் நிதி நிறுவனங்கள் வழியாக மேற்கொள்ளப்படுவதாக மின்சாரத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.


பெரம்பலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொதுமக்கள் தங்களது வீடுகளில் மற்றும் பொது இடங்களில் மின்சாரத்தை தேவையற்றவாறு வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். தற்போது மின்சாரத் துறை கடுமையான நிதி நெருக்கடிகளை எதிர்கொண்டு செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழக மின்வாரியத்தின் நிதி நிலையை கருத்தில் கொண்டு, அவசியமான கட்டமைப்பு பணிகள் முன்னுரிமை அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகள் தொடங்கியுள்ளன. புதிய மின்மாற்றிகள் மற்றும் துணை மின் நிலையங்களை அமைப்பதற்கான நிதி வழங்க மத்திய அரசின் நிதி நிறுவனங்கள் வழியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சில கால தாமதத்தின்போது தற்போது தேவையான நிதி கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில், தமிழகத்தின் பல பகுதிகளில் புதிய துணை மின் நிலையங்களை அமைப்பதற்கான டெண்டர்கள் விடப்பட்டுள்ளன. புதிய மின்மாற்றிகள் அமைப்பும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த பணிகள் நிறைவேற்றப்பட்டால் மின்தடை குறையும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

அதே நேரத்தில், ஸ்மார்ட் மீட்டர் திட்டம் குறித்து அவர் விளக்கினார். இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தவுடன் மாதந்தோறும் மின் கட்டணம் துல்லியமாக கணக்கிடப்படுவதோடு, தவறான கணக்கீடுகள் மற்றும் அதிக கட்டணப் புகார்கள் குறையும். ஸ்மார்ட் மீட்டர்கள் தானாகவே மின் பயன்பாட்டு விவரங்களை மின்வாரியத்தின் மைய கணினிக்கு அனுப்பும் திறன் கொண்டவை.

மொத்தத்தில், நிதி நெருக்கடிகள் இருந்தாலும், தமிழக மின்வாரியம் மின்சார விநியோகத்தை மேம்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பொதுமக்களின் ஒத்துழைப்பும் சிக்கனமான மின்சார பயன்பாடும் அவசியம் என்றும் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வலியுறுத்தினார்.

Read more: கணவர் கண்முன்னே காட்டுக்குள் வைத்து மனைவியை கூட்டு பலாத்காரம் செய்த 3 பேர்..!! தூத்துக்குடியில் துயரம்..!!

English Summary

Electricity bills will no longer increase uncontrollably.. Tamil Nadu government’s master plan..! – Minister Sivashankar’s announcement..

Next Post

வீட்டிலிருந்து மாதம் ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை சம்பாதிக்கலாம்..!! பெண்களுக்கு சூப்பர் சான்ஸ்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Tue Dec 16 , 2025
இன்றைய காலகட்டத்தில், பெண்கள் குடும்பப் பொறுப்புகளுடன் தங்கள் பொருளாதார நிலையையும் மேம்படுத்தி, சுயச்சார்புடன் வாழ வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கிராமப்புற மற்றும் நடுத்தரக் குடும்பப் பெண்களுக்கு, வீட்டை விட்டு வெளியே செல்லாமல் வருமானம் ஈட்டும் சுயதொழில் வாய்ப்புகள் மிகவும் அவசியமாகிறது. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், குறைந்த முதலீட்டில் நிலையான வருமானம் ஈட்ட உதவும் தையற்கலை போன்ற திறன் பயிற்சிகள் முக்கியப் பங்காற்றுகின்றன. இதை […]
Gemini Generated Image 1org9g1org9g1org 1

You May Like