தொடக்கக்கல்வி ஆசிரியர் பயிற்சி ஜூன் 5ஆம் தேதி முதல் விண்ணப்பம் செய்யலாம்……! பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!

தமிழகத்தில் அனைத்து வகை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் தொடக்கக்கல்வி பட்டைய பயிற்சியின் சேர்க்கை பெற விருப்பம் கொள்ளும் மாணவ, மாணவிகள் ஜூன் மாதம் 5ம் தேதி முதல் விண்ணப்பம் செய்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


இது தொடர்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் வெளியிட்டிருக்கின்ற செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, எஸ்.சி.இ.ஆர்.டி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து வகை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிடம் 2023-24 ஆம் ஆண்டுக்கான 2 வருட தொடக்கக்கல்வி பட்டய பயிற்சி மாணவர சேர்க்கை நடைபெற இருக்கிறது. அதோடு கூடுதல் விவரங்களை இணையதளத்தின் மூலமாக விண்ணப்பதாரர்கள் தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.

அதேபோல மாணவ, மாணவிகள் இணையதளம் மூலமாக ஜூன் மாதம் 5ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையில் விண்ணப்பம் செய்து கொள்ளலாம். அப்படி முடியாத சூழ்நிலையில், விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய விண்ணப்பதாரர்கள் தங்களுடைய இடத்திற்கு அருகே உள்ள ஏதாவது ஒரு மாவட்ட ஆட்சியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

கரூரில் ஐடி ரெய்டு…..! அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கடுப்பான உதயநிதி ஸ்டாலின் காரணம் என்ன…..?

Sat May 27 , 2023
தமிழகத்தின் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சரான செந்தில் பாலாஜிக்கு தொடர்புள்ள பல்வேறு இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சொந்தமான பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அதோடு ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களும் வருமானவரித்துறையினரின் சோதனைக்கு தப்பவில்லை. சுமார் 100 பகுதிகளுக்கு மேல் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது என்றும் கூறப்படுகிறது. கரூர் ராமகிருஷ்ணாபுறத்தில் […]
uthayanithi18

You May Like