கம்போடியாவில் உள்ள இந்தியர்களுக்கு அவசர உதவி எண்கள் அறிவிப்பு.. தாய்லாந்து மோதலுக்கு மத்தியில் தூதரகம் அட்வடைஸ்..

image 1753506332377

தாய்லாந்துடனான மோதலுக்கு மத்தியில் கம்போடியாவில் உள்ள இந்தியர்களுக்கு, அவசர உதவி எண்களை இந்தியா அறிவித்துள்ளது..

தாய்லாந்து – கம்போடியோ இடையேயான நீண்டகால எல்லை தகராறு கடந்த வியாழக்கிழமை கடுமையான சண்டையாக மாறியது.. இரு நாடுகள் ஜெட் விமானங்கள், பீரங்கிகள், டாங்கிகள் மற்றும் தரைப்படைகள் மூலம் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.. இதையடுத்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை (UNSC) நெருக்கடி குறித்து அவசரக் கூட்டத்தை நடத்தியது.. இந்த கூட்டத்திற்குப் பிறகு கம்போடிய தூதர் சியா கியோ தாய்லாந்துடன் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தனர்..


இந்த நிலையில் கம்போடியாவில் உள்ள இந்திய தூதரகம் இன்று (ஜூலை 26) தனது நாட்டில் வசிக்கும் குடிமக்களுக்கு எல்லைப் பகுதிகளைத் தவிர்க்குமாறு ஒரு புதிய ஆலோசனையை வெளியிட்டது. அவசர காலங்களில் தனது குடிமக்கள் தொடர்பு கொள்ள இந்திய தூதரகம் ஒரு ஹெல்ப்லைன் எண்ணையும் மின்னஞ்சல் ஐடியையும் தூதரகம் பகிர்ந்துள்ளது.

முன்னதாக தாய்லாந்தில் உள்ள இந்திய அதிகாரிகள், நடந்து வரும் மோதல்களில் சிக்கியுள்ள இடங்களின் பட்டியலைத் தவிர்க்குமாறு குடிமக்களைக் கேட்டுக்கொண்டனர். இந்த நிலையில், கம்போடியாவில் உள்ள இந்திய தூதரகமும் புதிய ஆலோசனையை வெளியிட்டுள்ளது..

“கம்போடியா-தாய்லாந்து எல்லையில் நடந்து வரும் மோதல்களைக் கருத்தில் கொண்டு, இந்தியர்கள் எல்லைப் பகுதிகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், இந்தியர்கள் புனோம் பென்னில் உள்ள இந்தியத் தூதரகத்தை +855 92881676 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது cons.phnompenh@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்” என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

தாய்லாந்து-கம்போடியா மோதல்

தாய்லாந்தும் கம்போடியாவும் இந்த வாரம் மிக மோசமான சண்டையில் ஈடுபட்டன.. இரு நாடுகளின் சர்ச்சைக்குரிய எல்லையில் கடுமையான பீரங்கித் தாக்குதல்கள் நடைபெற்றன.. ஒரு பழங்கால சிவன் கோவிலை ஒட்டிய சர்ச்சைக்குரிய பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன.. இது எல்லையில் உள்ள மற்ற பகுதிகளுக்கும் விரைவாகப் பரவியது, மேலும் தொடர்ந்து இரண்டாவது நாளாக கனரக பீரங்கித் தாக்குதல்கள் தொடர்ந்தன.

இந்த ஆண்டு மே மாதம் முதல், ஒரு சிறிய துப்பாக்கிச் சூட்டின் போது கம்போடிய ராணுவ வீரர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, தென்கிழக்கு ஆசிய அண்டை நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரிக்க தொடங்கியது. இந்த சம்பவம் இராஜதந்திர மோதல்களை தூண்டியது.. இறுதியில் ஆயுத மோதல்களுக்கு வழிவகுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : 3-ம் உலகப் போர் நெருங்குகிறதா? ரஷ்யாவிற்கு எதிரான அணு ஆயுதத் தாக்குதல்.. இந்த நாட்டில் இருந்து தான் நடக்கும்.. நிபுணர்கள் தகவல்..

English Summary

India announces emergency helplines for Indians in Cambodia amid conflict with Thailand.

RUPA

Next Post

கூகுள் பே, போன்பே, பேடிஎம், பயனர்களுக்கு பேட் நியூஸ்.. இனி இலவச UPI இல்லையா? RBI முக்கிய அப்டேட்..

Sat Jul 26 , 2025
Even as the UPI payment system continues to set new records, RBI Governor Sanjay Malhotra has indirectly stated that these services will no longer be available for free.
bevackr digital

You May Like