அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு..!! 40,000 காலியிடங்கள்..!! கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை..!!

நாட்டின் கிளை அஞ்சல் நிலையங்களில் காலியாக உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர், துணை கிளை போஸ்ட் மாஸ்டர், அஞ்சல் உதவியாளர் பணிகளுக்கான அறிவிப்பை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு மூலம் நாடு முழுவதும் 40,889 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பிப்பதாரர்கள், குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், எவ்வித எழுத்து மற்றும் நேர்காணல் தேர்வும் இல்லாமல், 10ஆம் வகுப்புத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலே தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன?

காலியிடங்கள்: தமிழ்நாட்டில் மட்டும் 3,167 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு வேலையா.?: அஞ்சல்துறை துறை சாராத சேவை அமைப்பின் (Extra Departmental system in the Department of Posts) கீழ் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கான ஆள்சேர்க்கை, படிகள் மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டாலும், அஞ்சல் துறையில் முழு நேர ஊழியர்களுக்கான சம்பள விகிதம் இவர்களுக்கு பொருந்தாது. (Gramin Dak Sevaks are holders of civil posts but they are outside the regular civil service)

அகவிலைப்படி: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மாற்றி அமைக்கப்படும் போதெல்லாம் இவர்களுக்கும் மாற்றி அமைத்து வழங்கப்படும்

ப்ரோமோஷன்: குறைந்தது 3 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட இந்த கிராம அஞ்சல் உதவியாளர்கள் துறைத் தேர்வின் மூலம் இந்திய அஞ்சல் துறையில் உள்ள நிர்வாகப் பிரிவின் கீழ் (Post of Administrative Offices (Circle Office and Regional Office) வரும் குரூப் ‘சி’ பணிக்கு (பல்நோக்கு பணியாளர் – Multi Tasking Staff) தகுதி பெறலாம்.

அதேபோல், 5 ஆண்டு பணி முன் அனுபவம் உடைய, கிராம அஞ்சல் உதவியாளர்கள் எவ்வித எழுத்துத் தேர்வும் இல்லாமல், இந்திய அஞ்சல் துறை சார்நிலைப் பணிகளில் (Posts of Subordinate Office) அடங்கிய குரூப் சி (பல்நோக்கு பணியாளர் – Multi Tasking Staff) நிலைக்கு தகுதியுடைவராவார். குறைந்தது 3 ஆண்டு பணி முன் அனுபவமுள்ள அஞ்சல் உதவியாளர்கள் துறைத் தேர்வின் மூலம் கூட இந்த பதவியை அடையலாம். அதன்பின், போஸ்ட்மேன், மெயில்கார்டு உள்ளிட்ட பதவிகளுக்கு உயர்வு பெற வாய்ப்புண்டு.

பணியின் தன்மை என்ன..? பகுதி நேர ஊழியர்களாக பயன்படுத்தப்படுவார்கள். அதாவது நாள் ஒன்றுக்கு 3 முதல் 5 மணி நேரம் மட்டுமே வேலை இருக்கும்.

ஓய்வு வயது: 65 வயது வரை பணியில் இருப்பார்கள்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? இன்றைய இளைஞர்கள் அரசு வேலை வாய்ப்புகளில் நாட்டம் செலுத்தி வருகின்றன. பொதுவாக, வட இந்தியாவில் யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி தேர்வுகளுக்கு தாயராகி வரும் தேர்வர்கள், இந்த கிராம உதவியாளர் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வது வழக்கம். வேலை நேரங்கள் போக இதர நேரத்தில் தேர்வுக்கு தயார் படுத்திக்கொள்கின்றனர். எனவே, நீங்கள் வாழ்வாதாரத்துக்கு வேறு வகைகளிலும் வருமானம் ஈட்டி வரும் நபராக இருந்தால் இந்த பதவிக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

Chella

Next Post

உங்கள் நிலத்தில் வேலை செய்ய 100 நாள் திட்ட பணியாளர்கள் வேண்டுமா..? எப்படி விண்ணப்பிக்கலாம்..?

Sun Feb 5 , 2023
100 நாள் வேலைத் திட்டம் என்பது, கிராமப்புறங்களில் குறைந்தபட்சம் 100 நாட்கள் கூலி வேலையை அளிப்பது என்ற அளவிலேயே நாம் எடுத்துக் கொள்கிறோம். ஆனால், இந்த திட்டத்தின் கீழ், 100 நாள் அட்டைதாரர்கள் தங்களுக்கு தேவையான பாசன வசதி, மரம் நடுதல், தோட்டக்கலை செய்வது, ஆழ்துளை கிணறு வெட்டுவது, மீன் வளர்க்கும் குளங்களை அமைப்பது, வீடு கட்டுவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடலாம். இதன் மூலம், தங்கள் தனிப்பட்ட குடும்ப […]

You May Like