டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து 138 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. முதலில் களம் இறங்கிய முகமது ரிஸ்வான் 14 பந்துகுளில் 15 ரன்கள் எடுத்தார். பாபர் அசாம் 32 ரன்களும் முகமது ஹாரீஸ் 8 ரன்களும் ஷான் மசூத் 38 ரன்களும் இப்டிகார் அகமது பூஜ்யம் ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். ஷதாப் கான் 20 ரன்கள், முகமது நவாஸ் 5 ரன்களும் முகமது வசீம் 4 ரன்கள், ஷசீன் 5 ரன் எடுத்தனர். ஹரீஸ் ரவுப் 1 ரன் எடுத்து மொத்தமாகவே 137 ரன்கள் எடுத்திருந்தனர். இங்கிலாந்து தனது திறமையான ஃபீல்டிங்கால் அதிக ரன்கள் எடுக்காமல் தடுத்துள்ளது.
இரண்டாவதாக களம் இறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாஸ்பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் பெரிய அளவிலான ரன்கள் இதில் எடுக்கவில்லை. ஜாஸ் பட்லர் 26 ரன்களும், அலெக்ஸ் ஹேல்ஸ் 1 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். பில்சால்ட் 10 ரன், பென் ஸ்ட்ரோக் 6 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் விளையாடி வருகின்றனர். 9 ஓவரில் 71 ரன்கள் எடுத்துள்ளது.
பாகிஸ்தானும் திறமையாக ஃபீல்டிங் செய்து வருவதால் போட்டி விறுவிறுப்படைந்துள்ளது. 12 ஓவர்களில் இலக்கை எட்டுமா என்ற ஆர்வத்தில் மக்கள் ஆரவாரம் செய்து வருகின்றனர். இந்தியாவுடனான போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே சிக்கர்கள், பவுண்டரிகள் என எடுத்த இங்கிலாந்து ஒரு சிக்சர் இதுவரை எடுத்துள்ளது.