சமீப காலமாக ஆன்லைன் பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள தொடங்கிவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தங்களுடைய பணத்தை இழந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது புதிய மோசடியாக, உங்கள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டுவிட்டது என்று மெசேஜ் வருகிறது. அதோடு ‘மேலும் தகவல்களுக்கு’ என்று ஒரு லிங்க் வருகிறது. அந்த லிங்கை க்ளிக் செய்தால் உங்கள் பணம் உள்ளிட்ட தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. எனவே மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன், விழிப்புடனும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.