சமீபத்தில் நீங்கள் டிரைவிங் பள்ளிக்கு சென்று பயிற்சி பெற்றிருந்தாலோ, லைசன்ஸ் வாங்கிவிட்டு எப்பொழுதாவது நீங்கள் காரை எடுத்த ஓட்டினாலோ வேகமாக கார் சென்று கொண்டிருக்கும் போது ஏற்படும் பொதுவான குழப்பம் முதலில் எதை அழுத்துவது என்பதுதான். அதைப் பற்றி பார்க்கலாம்.
காரை ஓட்டும் பலரது மனதில் தோன்றும் குழப்பம் திடீரென காரை நிறுத்த வேண்டும் என்ன செய்வது பிரேக் பிடிக்க வேண்டுமா? க்ளட்சை அழுத்த வேண்டுமா? முதலில் எதை அழுத்துவது என்பதுதான் அவர்களின் மிகப்பெரிய கேள்வியாக இருக்கும்.
நீங்கள் காரை வேகமாக ஓட்டிக் கொண்டிருக்கும் போது பிரேக்கை முதலில் பிடித்தால் கார் ஆப் ஆகிவிடும் கிளட்சை பிடித்தால் உடனடியாக நிறுத்த முடிவதில்லை. எனவே இந்த குழப்பத்தை நீங்கள் தீர்க்க வேண்டும் என்பது மிகவும் எளிதானதுதான். செல்லும் வேகம் மற்றும் இடத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும்.
சமமான நாலையில் 40 கி.மீ. வேகத்தில் சென்றுகொண்டிருந்தால் முதலில் பிரேக்கை பிடிக்க வேண்டும். கார் குறிப்பிட்ட வேகத்திற்கு கீழ் குறையும் வரை ஸ்டால் ஆகாது. அதனால் பிரேக்கை பிடித்தால் வேகம் குறையும் பின்னர் நாம் கிளட்ச் பிடித்துக் கொள்ளலாம்.
நீங்கள் 20 முதல் 30 கி.மீ. வேகத்தில்தான் செல்கிறீர்கள் என்றால் முதலில் கிளட்சை பிடிக்க வேண்டும். அப்போது கார் ஸ்டால் ஆகாது. கிளட்சைபிடித்த பின்னர் பிரேக்கை பிடிக்க வேண்டும். அப்போதுதான் கார் நிறுத்தமுடியும். நீங்கள் மலைப்பகுதியில் உள்ள சாலையில் பயணிக்கும் போது ஏற்றமாக உள்ள பகுதியில் காரை பிரேக் பிடிக்க ஆக்சிலேட்டரை விட்டாலே கார் நின்றுவிடும். எனவே ஆக்ஸிலேட்டரை விடும் முன்பு கிளட்சை பிடிக்க வேண்டும். இல்லை என்றால் பின்னோக்கி செல்லும்.
ஒரு வேளை சமமான சாலை எனில் காரை நிறுத்த வேண்டாம் வேகத்தை குறைத்தால் போதும். காரில் ஆக்சிலேட்டரில் இருந்து பிரேக்கை அழுத்தினால் போதும் எனவே இந்த தருணத்தில் கிளட்சை பிடிக்க வேண்டாம்.