“எல்லாருடைய அம்மாவும் ஒரு நாள் சாவ தான் செய்வாங்க.. டிராமா போடாம ஆபீஸ் வந்து சேரு.!” லீவு கேட்ட ஊழியருக்கு மேலதிகாரியின் பதில்..!!

Indian employee pakistan

சென்னை யுகோ வங்கியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது. வங்கி ஊழியர்கள் அளித்த புகார் மெயிலில், ஒரு உயர் அதிகாரி மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டது தெரியவந்தது.


ஒரு ஊழியர் தன் அம்மாவின் மரணம் காரணமாக எமெர்ஜென்சி விடுப்பு கோரினார். ஆனால், தலைமைப் பதவியில் இருக்கும் அந்த அதிகாரி, “எல்லோருடைய அம்மாவும் தான் இறப்பார்கள். டிராமா போடாதே.. உடனடியாக ஆபீஸ் சேருங்கள், இல்லையெனில் சம்பளம் பிடிக்கப்படும்” என்று அதிர்ச்சியூட்டும் பதில் கூறியதாகவும், கூடவே எச்சரிக்கை கடிதமும் கொடுத்துள்ளார்.

சென்னை மண்டலத்தில் உள்ள பல வங்கி ஊழியர்களை அதிகாரி அடிமைகளைப் போல நடத்தி, அலுவலகத்தில் பயம் மற்றும் ஒடுக்குமுறை சூழலை உருவாக்கியதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஊழியர்களின் விடுப்புக் கோரிக்கைகள், அவை அவசர விடுப்பாக இருந்தாலும் பல நேரங்களில் மறுக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு வங்கி மேனேஜரின் தாய் ஐசியுவில் சிகிச்சை பெற்று வந்த போது, அவர் விடுப்பு கேட்டபோது, எப்போது மீண்டும் ஆபீசுக்கு வருவீர்கள் என கேட்டு அதன் பிறகே விடுப்பு வழங்கப்பட்டதாகவும், அதே சமயம் மற்றொரு ஊழியரின் தாயார் இறந்த போது, அதற்குப் பதிலாக உயர் அதிகாரி மனிதாபிமானமற்ற முறையில் மிரட்டியதாகவும் மின்னஞ்சலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், மக்கள் மருத்துவ அவசர நிலை, குழந்தை சிகிச்சை போன்ற சூழ்நிலைகளிலும் லீவ் வழங்க மறுக்கும் நிலை ஏற்பட்டதாகவும் வெளிவந்துள்ளது. இந்த ஸ்க்ரீன்ஷாட் இணையத்தில் பரவி, நெட்டிசன்கள் அதிகாரியின் நடத்தை கொடூரமானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கண்டித்து வருகிறார்கள்.

ஒரு நெட்டிசன் கூறியதாவது: “எந்த ஊழியரும் அவசர விடுப்புக்கு உரிமை பெற்றிருக்க வேண்டும். அதிகாரிகளுக்கு விதிமுறைகள் இருக்கலாம், ஆனால் அவசர நிலையில் அதை மறுப்பது சரியல்ல.” என்றார். இதுவரை, யுகோ வங்கி அல்லது அதன் சென்னை மண்டல அலுவலகம் சம்பவத்திற்கு அதிகாரப்பூர்வ பதில் அளிக்கவில்லை.

Read more: John Cena-வுக்கு இப்படி ஒரு மனசா..? WWE-வை தாண்டி அவர் செய்யும் நெகிழ்ச்சியான செயல்..!! சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

Next Post

“யாரா இருந்தாலும் கண்ணீர் வரும்..” அன்புமணியின் ஆஸ்கர் விருது விமர்சனத்திற்கு அமைச்சர் உருக்கமான பதில்..

Tue Sep 30 , 2025
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அன்புமணியின் ஆஸ்கர் அவார்டு விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த அவர் “ உணர்ச்சியற்ற சிலர் இருக்கும் இந்த காலத்தில் நாங்களும் பொது வாழ்க்கையில் இருக்கிறோம்.. மக்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சேவை செய்து வருகிறோம் என்பதை நான் பதிவு செய்ய விரும்புகிறேன். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் திமுக சதி இருக்கிறது என்ற குற்றச்சாட்டு […]
anbil mahesh anbumani

You May Like