வங்கக்கடலில் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…..! எந்தெந்த மாவட்டங்களில் கனமழை……?

வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்காக வாய்ப்பிருக்கிறது.


நீலகிரி கோவை போன்ற மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஓரிரு பகுதிகளில் கன முதல், மிக கன மழையும், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, திருப்பூர், குமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் போன்ற மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழையும் பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல நாளை மறுநாள் தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற இடங்களில் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி போன்ற மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து வரும் 7ம் தேதி மற்றும் 8ம் தேதிகளில் தமிழகம், புதுவை காரைக்கால் போன்ற இடங்களில் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

அதேபோல சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 2 நாட்களுக்கு தானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் நகரத்தின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய சாம்பல் முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செலசியஸை ஒட்டியே இருக்கும் என்று தெரிவித்திருக்கிறது வானிலை ஆய்வு மையம்.

வங்க கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் காற்று வேகமாக வீச கூடும் என்பதால் இன்று முதல் வரும் 8ம் தேதி வரையில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடித்து செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

திருமணம் ஆன நாள் முதல் கணவனுடன் டிஷ்யூம் டிஷ்யூம்…..! கல்யாணம் ஆன இரண்டே மாதத்தில் புதுமண பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்….!

Tue Jul 4 , 2023
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்துள்ள கீழ் அனுப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன்(29). இவருக்கும் சீர்காழியில் அடுத்துள்ள அரசூரை சேர்ந்த ரோஜா(25) என்ற பட்டதாரி பெண்ணுக்கும் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி சிதம்பரத்தில் திருமணம் நடந்தது. இந்த நிலையில், திருமணம் ஆன நாள் முதல் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. வழக்கம்போல நேற்று இரவும் ரோஜாவும், சிலம்பரசனும் தகராறு செய்து கொண்டனர். இதில் வாக்குவாதம் […]
murder

You May Like