பிரபல நடிகர் விஜய் சேதுபதி குடும்பத்தில் இருந்து திரைக்கு வரும் புதிய நபர்…..! யார் தெரியுமா…..?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் தமிழ் திரையுலகில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலமாக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் விடுதலை.


இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது ஆகவே இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் அனைவரும் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

அதோடு தற்சமயம் ஜவான், மேரி கிறிஸ்மஸ், பிசாசு 2 என பல்வேறு திரைப்படங்களை விஜய் சேதுபதி தன் கைவசம் வைத்திருக்கிறார். இந்த நிலையில் தான் விஜய் சேதுபதி குடும்பத்தில் இருந்து மிக விரைவில் ஒரு கதாநாயகன் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆக உள்ளதாக சொல்லப்படுகிறது.

விஜய் சேதுபதியின் குடும்பத்திலிருந்து அவருடைய மகன்தான் மிக விரைவில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். இதற்கான முயற்சிகள் அனைத்தும் முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது எனவும் தகவல் கிடைத்திருக்கிறது.

முன்னரே விஜய் சேதுபதி தன்னுடைய சூரியாவை தன்னுடைய சிந்துபாத் படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

.

Next Post

பலருக்கும் தெரியாத சூப்பர் திட்டம்..!! ஏடிஎம் கார்டு வைத்திருந்தால் ரூ.5 லட்சம் வரை காப்பீடு..!! எப்படி தெரியுமா..?

Wed Apr 19 , 2023
இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளிலும் வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் சேவை வழங்கப்படுகிறது. ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணத்தை எடுக்க முடியும் என்பது மட்டும் தான் பல வாடிக்கையாளர்களுக்கு தெரியும். ஆனால், ஏடிஎம் கார்டு மூலம் காப்பீடு வசதியும் பெற்றுக் கொள்ளலாம் என்பது எத்தனை பேருக்கும் தெரியும்..? ஏடிஎம் கார்டு வழங்கப்பட்டவுடன் அந்த வாடிக்கையாளர்களுக்கு விபத்து காப்பீடும் கிடைக்க தொடங்கும். வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் ஏடிஎம் கார்டுகளின் வகைகளுக்கு ஏற்ப காப்பீடு தொகை வழங்கப்படுகிறது. […]
ATM cards

You May Like