பிரபல நடிகை அனன்யா சோனி, தான் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடுவதாக கூறி, ரசிகர்கள் தனக்காக பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரபல ஹிந்தி நடிகையான அனன்யா சோனி, சிறுநீரக செயலிழப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். கடந்தாண்டு அவர் வெளியிட்ட வீடியோவில் தனது சிகிச்சைக்கு ரசிகர்கள் பண உதவி செய்யுமாறு கோரியிருந்தார். இந்நிலையில், நேற்றைய அவரின் இன்ஸ்டாகிராம் பதிவில், என் சிறுநீரகம் செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். நான் டயாலிசிஸ் செய்ய வேண்டும். மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளேன். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.

வாழ்க்கை எனக்கு எளிதான பயணமாக அமையவில்லை. அதை எளிதாக எடுக்க முயற்சி செய்கிறேன். விரைவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். டயாலிஸிஸுக்கு பின்னர் அதற்கு விண்ணபிக்கவுள்ளேன்” என தெரிவித்துள்ளார். இதையடுத்து, ரசிகர்களும் திரையுலகினரும், அனன்யா விரைவில் குணமாக வாழ்த்து தெரிவித்துள்ளனர்.