சோகம்…!இசைமாமணி விருது பெற்ற பிரபல பாடகி லலிதா காலமானார்…!

இசைமாமணி விருது பெற்ற லலிதா உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

ஐகிரி நந்தினி என்னும் பக்தி பாடல் இன்று வரை பலரது மனங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இந்த பாடலை பாடியவர்கள் பம்பாய் சகோதரிகள் ஆவர். அவர்களில் இளையவரான லலிதா நேற்று உடல்நிலை குறைவு காரணமாக காலமானார். கேரளாவைச் சேர்ந்த இவர் மும்பையில் படித்து சென்னையில் வசித்து வந்தார். சகோதரி சரோஜாவும் இவரும் சேர்ந்து பல பக்தி பாமாலைகளை பாடல்களைப் பாடி ஆன்மீகவாதிகளின் மனதை வென்றவர்கள்.


கேரளாவின் திருச்சூரில் பிறந்து, பம்பாயில் வளர்ந்து, இசை பயிலச் சென்னையில் சுமார் ஐம்பது ஆண்டுகளாக இசைப்பணி ஆற்றி வருபவர்கள் பாம்பே சகோதரிகள் எனப்படும் சி. சரோஜாவும், சி. லலிதாவும். தமிழிசைச் சங்கம் வழங்கும் உயரிய விருதான ‘இசைப்பேரறிஞர்’, தமிழக அரசின் ‘கலைமாமணி’, இந்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருது, இசைமாமணி, நியூயார்க் தமிழ்ச் சங்கம் வழங்கிய ‘தமிழ்க் கலைவாணி’ உட்பட எண்ணற்ற விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vignesh

Next Post

அனைத்து சாதங்களுக்கும் ஏற்ற நாவூறும்.. ஆந்திரா கத்திரிக்காய் மசாலா..!

Wed Feb 1 , 2023
சுவையான ஆந்திரா ஸ்டைலில் கத்திரிக்காய் மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் – 250 கிராம் வெங்காயம் – 3 புளி – சிறு எலுமிச்சை அளவு எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு தேங்காய் துருவல் – 1 கப் கடுகு – தேவைக்கேற்ப  உளுத்தம் பருப்பு – தேவைக்கேற்ப செய்முறை விளக்கம் : முதலில், கத்தரிக்காய்களைக் கழுவி, தண்டுகளை […]
Screenshot 2023 01 23 18 43 00 06 40deb401b9ffe8e1df2f1cc5ba480b12

You May Like