இசைமாமணி விருது பெற்ற லலிதா உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
ஐகிரி நந்தினி என்னும் பக்தி பாடல் இன்று வரை பலரது மனங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இந்த பாடலை பாடியவர்கள் பம்பாய் சகோதரிகள் ஆவர். அவர்களில் இளையவரான லலிதா நேற்று உடல்நிலை குறைவு காரணமாக காலமானார். கேரளாவைச் சேர்ந்த இவர் மும்பையில் படித்து சென்னையில் வசித்து வந்தார். சகோதரி சரோஜாவும் இவரும் சேர்ந்து பல பக்தி பாமாலைகளை பாடல்களைப் பாடி ஆன்மீகவாதிகளின் மனதை வென்றவர்கள்.
கேரளாவின் திருச்சூரில் பிறந்து, பம்பாயில் வளர்ந்து, இசை பயிலச் சென்னையில் சுமார் ஐம்பது ஆண்டுகளாக இசைப்பணி ஆற்றி வருபவர்கள் பாம்பே சகோதரிகள் எனப்படும் சி. சரோஜாவும், சி. லலிதாவும். தமிழிசைச் சங்கம் வழங்கும் உயரிய விருதான ‘இசைப்பேரறிஞர்’, தமிழக அரசின் ‘கலைமாமணி’, இந்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருது, இசைமாமணி, நியூயார்க் தமிழ்ச் சங்கம் வழங்கிய ‘தமிழ்க் கலைவாணி’ உட்பட எண்ணற்ற விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.