வேலூர் மாவட்ட பகுதியில் உள்ள மலைச்சந்து கிராமத்தில் விவசாயியான சிலோர்மணி (எ) மணிகண்டன் (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மாலை விவசாய நிலத்தில் நெல் பயிரிடுவதற்காக தனது டிராக்டரை வைத்து உழுது கொண்டிருந்துள்ளார்.
அப்போது ஒரு வாய்க்காலிருந்து மற்றொரு கால்வாயிக்கு செல்வதற்காக கால்வாயின் கரையில் டிராக்டரை ஏற்றியபோது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் கவிழ்ந்து மணிகண்டன் படுகாயம் அடைந்தார். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக தாமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனைக்கு கொண்டு சென்ற மணிகண்டனை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அணைக்கட்டு போலீசார் மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.