பாதியாக குறைந்த பூக்களின் விலை… விவசாயிகள் வேதனை!

flower mar

திண்டுக்கல் சந்தையில் பூக்களின் விலை குறைந்துள்ளதாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். 


தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக பூக்களின் விலை உயர்வு, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது பூவின் வரத்து அதிகரித்ததால், பல்வேறு வகை பூக்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்கின்றனர்.

குறிப்பாக திண்டுக்கல் சந்தையில் சம்பங்கி ரூ.30, குல்லைப்பூ ரூ.150, மல்லிகை ரூ.400க்கு விற்பனையாகிறது. முந்தைய வாரங்களில் மல்லிகை பூ ரூ.700 வரை விற்பனையான நிலையில், தற்போது ரூ.400க்கு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று குல்லை, சம்பங்கி உள்ளிட்ட பூக்களும் ஏறத்தாழ பாதியில் விலை சரிவை சந்தித்துள்ளன.

பூக்களின் விலை குறைவால், திருமண விழாக்கள், காயத்ரி ஹோமம், வீட்டு பூஜைகள், போன்ற நிகழ்வுகளுக்கு பூ வாங்க வந்த பொதுமக்கள் விலையை கேட்டு மகிழ்ந்தனர். அனைத்து பூக்களின் விலை குறைந்து இருந்ததால் சிறுவியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பூக்களை வாங்கிச் சென்றனர். பூக்கள் விலை சரிவால் கூலி கூட கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Read more: மீண்டும் பணிநீக்கமா..? சைலண்டா காய் நகர்த்தும் மைக்ரோசாப்ட்.. கதறும் ஊழியர்கள்..!!

Next Post

வயிற்றுப் புற்றுநோயின் 5 எச்சரிக்கை அறிகுறிகள்.. கட்டாயம் புறக்கணிக்கக் கூடாது..

Fri Jun 27 , 2025
வயிற்று புற்றுநோயின் எச்சரிக்கை அறிகுறிகள் குறித்து பார்க்கலாம்.. புற்றுநோய் என்பது ஒரு தீவிரமான மற்றும் வாழ்க்கையையே மாற்றும் நோயாகவே உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் இந்த நோய் பாதிப்பு வியத்தகு முறையில் மேம்பட்டுள்ளன, மேலும் பல்வேறு வகையான மருந்துகள் இப்போது கிடைக்கின்றன. மேலும் புற்றுநோயின் அறிகுறிகளை முன்கூட்டியே தெரிந்து கொள்வது ஆபத்தை குறைக்க உதவும்.. புற்றுநோயின் வகை மற்றும் தனிநபரைப் பொறுத்து அறிகுறிகள் கணிசமாக மாறுபடும். அந்த வகையில் இதில் வயிற்றுப் […]
1750911052 1750866947 1749232282 cancer 2025 06 c7a7811f79a686a3abbe517d65cfefa1

You May Like