நாட்டிலுள்ள நலிந்த விவசாயிகளுக்கு உதவுவதற்காக மத்திய மோடி அரசு கொண்டுவந்த திட்டம்தான் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (பிம் கிசான்) திட்டம். இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 6000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம் ஒரு ஆண்டில் மொத்தம் மூன்று தவணைகளாக இந்தப் பணம் பிரித்து வழங்கப்படுகிறது. இந்தப் பணத்தை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே அரசு டெபாசிட் செய்கிறது.
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் இணைவதற்கு சில நிபந்தனைகளும் விதிமுறைகளும் உள்ளன. விவசாயிகள் அனைவருக்குமே இந்த நிதியுதவி கிடைத்துவிடாது. திட்டத்தின் தகுதி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் விவசாயிகள் மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெற முடியும். கேஒய்சி சரிபார்ப்பு முக்கியம். அதைத் தொடர்ந்து நிலப் பதிவுகளைச் சரிபார்த்தல், வங்கிக் கணக்கை ஆதாருடன் இணைத்தல் மற்றும் நேரடி பணப் பரிமாற்ற விருப்பத்தை செயல்படுத்துதல் போன்ற பணிகளை விவசாயிகள் முடிக்க வேண்டும்.
ஒருவேளை நீங்கள் இன்னும் மேற்கூறிய பணிகளை முடிக்கவில்லை என்றால், உடனடியாக அதைச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், அடுத்த தவணைத் தொகை உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். பிஎம் திட்டத்தின் பலன்கள் உண்மையான மற்றும் தகுதியான விவசாயிகளை மட்டுமே சென்றடைய வேண்டும் என்று மத்திய அரசு இதுபோன்ற விதிமுறைகளை உருவாக்கியுள்ளது. எனவே இந்த அப்டேட்களை கட்டாயம் முடித்தே ஆகவேண்டும்.
மத்திய அரசு அடுத்த தவணையை வெளியிடுவதற்கு முன்பு விவசாயிகளுக்காக ஒரு சிறப்பு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இது மே 31 வரை நடைபெறும். தகுதியுள்ள மற்றும் தகுதியற்ற பயனாளிகளைச் சரிபார்ப்பதும், புதிய விவசாயிகளை இத்திட்டத்தில் இணைப்பதும் இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாகும். இதனால் எந்தவொரு தகுதியுள்ள விவசாயியும் 2000 ரூபாய் தவணைத் தொகையைப் பெறாமல் போகக்கூடாது என்று அரசு விரும்புகிறது.
பிஎம் கிசான் திட்டத்தின் பலன்கள் அதிகபட்ச விவசாயிகளைச் சென்றடையவும், எந்த வகையான மோசடிகள் ஏற்படாமல் தடுக்கவும் அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. அதற்காகவே பிஎம் கிசான் திட்டத்தின் விதிமுறைகளை அரசு கடுமையாக்கியுள்ளது. பிஎம் கிசான் திட்டத்தின் விதிகளின்படி, முதல் தவணைப் பணம் ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையிலும், இரண்டாவது தவணைப் பணம் ஆகஸ்ட் முதல் நவம்பர் மாதம் வரையிலும், மூன்றாவது தவணைப் பணம் டிசம்பர் முதல் மார்ச் வரையிலும் வெளியிடப்படும். அதன்படி, 20ஆவது தவணைத் தொகை ஜூன்-ஜூலை மாதங்களுக்கு இடையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகள் ஏதேனும் பிரச்சனையை சந்தித்தாலோ அல்லது ஏதேனும் உதவி தேவைப்பட்டாலோ pmkisan-ict@gov.in என்ற மின்னஞ்சல் முகவரி, உதவி எண் 155261 அல்லது 1800115526, 011 23381092 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதன் மூலம் அவர்களுக்கு சரியான தீர்வு கிடைக்கும்.
பிஎம் கிசான் திட்டத்தின் பயனாளிகள் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா இல்லையா என்பதை அறிந்து கொள்வது மிகவும் எளிதானது. பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால் நீங்கள் தவணைத் தொகையைப் பெறுவதில் சிரமம் இருக்காது. அதற்கு நீங்கள் https://pmkisan.gov.in/ என்ற வெப்சைட்டில் சரிபார்க்கலாம். இதில் உள்ளே சென்றதும் Farmers Corner என்ற ஆப்சன் இருக்கும். அதில் Beneficiary List என்ற பிரிவில் நீங்கள் உங்களுடைய விவரங்களை சரிபார்க்கலாம்.
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் தொடர்ந்து நிதியுதவி பெறுவதற்கு கேஒய்சி சர்பார்ப்பு அவசியம். அதை உடனே செய்துமுடிக்க வேண்டும். இல்லாவிட்டால் நிதியுதவி கிடைக்காமல் போகும். இன்றைக்குள் (மே 31) இந்த அப்டேட்டை செய்து முடித்தால் நல்லது. அதேபோல, பிஎம் கிசான் திட்டத்தில் புதிதாக சேர நினைக்கும் விவசாயிகள் இன்றைக்குள் (மே 31) பதிவு செய்துசெய்து கொள்ளலாம்.