சுடுகாட்டில் குழி தோண்டி படுத்து விரதமா?.. பக்தரின் வித்யாசமான நேர்த்திக்கடன்…!!

நெல்லை மாவட்டம் இட்டமொழி அருகே இருக்கும் சங்கனாங்குளம் பகுதியில் குடியிருக்கும் ராமையா மகன் சந்திரன்(46). இவர் பாளையங்கோட்டை உழவர் சந்தை அருகே பெட்டிக்கடை வைத்துள்ளார். தற்போது குலசேகரப்பட்டினம் கோவிலுக்கு சந்திரன் மாலை அணிந்து இருக்கிறார். நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக சங்கனாங்குளம் சுடுகாட்டில் 6 அடிக்கு குழிதோண்டி படுத்து கொண்டு 21 நாள் விரதத்தை தொடங்கியுள்ளார்.


இதுகுறித்து பக்தர் சந்திரன் கூறுகையில், எனக்கு 9 வருடங்களுக்கு முன்பு தொண்டையில் புற்றுநோய் வியாதி வந்தது. பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் நோய் குணம் ஆகவில்லை. மருத்துவர்கள் என் உயிருக்கு 21 நாள் கெடு விதித்தனர். அப்போது நான் குலசேகரப்பட்டினம் கோயிலுக்கு சென்று வழிபட்டு கடலில் நீராடினேன். உடனே புற்றுநோய் குணமானது.

பின்னர் சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக எங்கள் ஊர் சுடுகாட்டுக்காளி இருக்கும் பகுதியில் பூமிக்கு அடியில் குழி தோண்டி சாப்பிடாமல் தண்ணீர் மட்டும் குடித்து விரதம் இருந்து வருகிறேன். இந்த வருடம் எனது தங்கைக்கு குழந்தை இல்லாததால் அவளுக்கு குழந்தை வரம் வேண்டி பூமிக்கு அடியில் படுத்து 21 நாள் விரதம் இருந்து வருகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

1newsnationuser5

Next Post

அக்.1 முதல் இந்தியாவில் 5G சேவையை பெறலாம்.. ஆனால் இந்த நகரங்களில் மட்டும் தான்..

Sat Sep 24 , 2022
நாட்டின் முக்கிய நகரங்களில் அக்டோபர் 1-ம் தேதி 5ஜி சேவை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 5ஜி நெட்வொர்க்கை ஒரு சில மாதங்கள் அறிமுகப்படுத்த இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் அதானி குழுமத்தின் தலைமையில் கடந்த மாதம் 5ஜி அலைக்கற்றையை 1.50 லட்சம் கோடிக்கு மேல் மத்திய அரசு விற்பனை செய்தது. அக்டோபர் 24 ஆம் தேதிக்குள் டெல்லி, மும்பை, […]
1003178 5g

You May Like