பட்டாசு ஆலை விபத்து.. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி.. முதலமைச்சர் உத்தரவு..

தருமபுரி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார் ..

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த, நாகதாசம்பட்டியில் சரவணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது.. இந்த பட்டாசு ஆலையில் இன்று காலை வழக்கம் பொல் ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர்.. இந்நிலையில் அந்த பட்டாசு ஆலையில் இன்று எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.. இதையடுத்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது..


இந்த தீ விபத்தில் அங்கு வேலை பார்த்து வந்த பழனியம்மாள், முனியம்மாள் ஆகிய 2 பேர் உயிரிழந்தனர்.. மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த சிவலிங்கம் என்பவர் சிகிச்சைக்காக, தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. மேலும் தீ விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.. இந்த தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

இந்நிலையில் இந்த பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.. மேலும் இந்த விபத்தில் உயிரிழந்த பழனியம்மாள், முனியம்மாள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் இந்த பட்டாசு விபத்தில் காயமடைந்த சிவலிங்கம் என்பவருக்கு ரூ.1 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்..

RUPA

Next Post

விஜய் தொலைக்காட்சியின் முக்கிய தொடர்களின் நேரம் அதிரடி மாற்றம்….! முழு விவரம் இதோ…..!

Thu Mar 16 , 2023
தொடர்களுக்கு பெயர் போன சன் டிவியை தொடர்ந்து, விஜய் டிவியில் தான் தற்போது பல்வேறு தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இதன் காரணமாக, விஜய் தொலைக்காட்சி பல்வேறு தொடர்களை புதிதாக களமிறங்கி உள்ளது. ஒரு சில பழைய தொடர்கள் முடிவுக்கு வர உள்ளதால் புத்தம் புதிய தொடர்கள் விரைவில் ஒளிபரப்பாக உள்ளன. ஆஹா கல்யாணம், பொன்னி உள்ளிட்ட புதிய தொடர்களின் விளம்பரங்கள் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. இந்த புதிய தொடர்கள் […]
விரைவில் வெள்ளித்திரையில் களம் இறங்கும் ’ராஜா ராணி 2’ பிரபலம்..! யார் தெரியுமா?

You May Like