அமெரிக்காவில் தீபாவளி பண்டிக்கை அன்று பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கியும், பொது விடுமுறை அறிவித்தும் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
இந்தியாவை போலவே, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழும் மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். ஆனால், அந்தந்த நாட்டு சட்டத்திட்டங்களின் படியே வெளிநாடு வாழ் இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர். அதனடிப்படையில், அமெரிக்காவில் தீபாவளி பண்டிகைக்கு 2007ம் ஆண்டு அந்நாட்டு அரசு அங்கீகாரம் வழங்கியது. இதையடுத்து, அங்கு, தீபாவளி பண்டிகை கொண்டாடத்தில் அந்நாட்டு அதிபர் உட்பட பெரும்பாலானோர் ஈடுபடுகின்றனர். 2002இல் இருந்து ஆண்டு தோறும் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றுவருகிறது.
இதந்நிலையில், அமெரிக்காவின் உத்தா மாகாண மேலவையில் தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கி சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் இந்த மாகாணத்தில் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் வரும் தீபாவளி பண்டிகை காலத்தில் 5 நாள்கள் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பண்டிகை அன்று மாகாணத்தில் பொது விடுமுறை அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.