தூய்மையை முன்னெடுத்துச் செல்லும் மகளிருக்கான சிறப்பு விருது…! மத்திய அரசு அறிமுகம்…!

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் தூய்மை மற்றும் கழிவு மேலாண்மையில் மகளிரின் தாக்கத்தை எடுத்துரைக்கும் வகையில், தூய்மையை முன்னெடுத்துச் செல்லும் மகளிருக்கான சிறப்பு விருதை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி அறிமுகப்படுத்தினார்.


இதற்கான விண்ணப்பங்களை ஏப்ரல் 5, 2023 வரை அனுப்பலாம். சுய உதவிக்குழுக்கள், சிறு நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், மகளிர் தலைவர்கள் மற்றும் தூய்மைப்பணி சாதனையாளர்கள் ஆகியோர் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

சமுதாயம் மற்றும் பொதுக் கழிப்பறை மேலாண்மை, கழிவுநீர் தொட்டி சுத்திகரிப்பு சேவை, கழிவிலிருந்து செல்வமாக்கப்பட்ட பொருட்கள் உள்ளிட்டப் பிரிவுகளில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்

Vignesh

Next Post

செல்போனால் சீரழிந்த மைனர் சிறுமியின் வாழ்க்கை…..! 2 காம கொடூரர்கள் அதிரடி கைது…..!

Fri Mar 10 , 2023
தற்போது உள்ள காலகட்டத்தில் செல்போன் என்பது அனைவரின் வாழ்விலும் இன்றியமையாத ஒரு தேவையாகிவிட்டது. ஆனால் இந்த செல்போன் மூலமாக பல நல்ல விஷயங்கள் நடந்தாலும் அதே நேரம் இதற்கு மற்றொரு கோர முகமும் இருக்கிறது. தற்போது உள்ள அதிநவீன சாதனங்களை பொறுத்தவரையில் அந்த சாதனங்களை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில்தான் நன்மையும், தீமையும் அடங்கியிருக்கிறது.. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் செல்போன் வாங்கி தருவதாக தெரிவித்து ஒரு சிறுமியை 4 […]
Gangrape

You May Like