”கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல”..!! ரூ.3,454 கோடி ஒதுக்கிய மத்திய அரசு வலுக்கும் கண்டனம்..!!

மிக்ஜாம் புயல் மற்றும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து ரூ.276 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் டிசம்பர் 3, 4 ஆம் தேதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னை பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வந்து கொண்டிருந்த நிலையில், தென் மாவட்டங்களையும் மழை பதம் பார்த்துவிட்டது. கனமழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. இதற்கிடையே, மிக்ஜம் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூ.6,000 நிவாரணம் ரொக்கமாக வழங்கப்பட்டது.

இந்நிலையில், மிக்ஜாம் புயல் மற்றும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து ரூ.276 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்பிற்காக ரூ.115.49 கோடியும், டிசம்பர் மழை, வெள்ள பாதிப்புக்காக ரூ.160.61 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு ரூ.276 கோடி ஒதுக்கீடு செய்த மத்திய அரசு, கர்நாடகாவுக்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை வாரி வழங்கியுள்ளது.

இந்நிலையில், இதனை சுட்டிக் காட்டி எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது, “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல… வறட்சி நிவாரணம் என 3,454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு 275 கோடி மட்டுமே. தமிழ்நாடு கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம்.
தீராத வன்மம்” என குறிப்பிட்டுள்ளார்.

Read More : மிக்ஜாம் புயல்..!! தமிழ்நாட்டிற்கு ரூ.276 கோடி ஒதுக்கீடு..!! கர்நாடகாவுக்கு இத்தனை கோடியா..? மத்திய அரசு ஒப்புதல்..!!

Chella

Next Post

கொளுத்தும் வெயில்..!! கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு ஆபத்து..!! எச்சரிக்கும் மகப்பேறு மருத்துவர்..!!

Sat Apr 27 , 2024
தமிழ்நாட்டில் வெயில் காரணமாக மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில் கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர் எச்சரித்துள்ளார். தமிழ்நாட்டில் மே மாதம் தொடங்குவதற்கு முன்னதாகவே கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நாளுக்கு நாள் வெப்பநிலை கடுமையாக அதிகரித்து வருகிறது இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வெப்பநிலை 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளதாகவும், சில […]

You May Like