Flash : மீண்டும் ஷாக்.. இன்று ரூ.2,400 உயர்ந்த தங்கம் விலை..! ஒரே நாளில் தலைகீழ் மாற்றம்..!

Gold jewellery 1 1

சென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து ரூ.1,10,400க்கு விற்பனை செய்யப்படுகிறது..

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.300 உயர்ந்து ரூ.13,800-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.2,400 அதிகரித்து ரூ.1,10,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை கடந்த 2 நாட்களில் ரூ.5,600 குறைந்த நிலையில் இன்ரு மீண்டும் உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

அதே போல் இன்று வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்து, ரூ.265க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.5000 அதிகரித்து ரூ.2.65 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

Read More : Flash : சில்லறை விற்பனை நிலையங்களில் மொத்தமாக பெட்ரோல், டீசல் வாங்க தடை.. மத்திய அரசு அதிரடி..!

English Summary

In Chennai today, the price of jewelery rose by Rs 2,400 to Rs 1,10,400.

RUPA

Next Post

Breaking : விவசாயிகளுக்கு குட்நியூஸ்.. ரூ.134.83 கோடி மதிப்பில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம்.. முதல்வர் விஜய் அறிவிப்பு..!

Fri Jun 12 , 2026
ரூ.134.83 கோடி மதிப்பில் உழவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழ்நாட்டில் நெல் சாகுபடி, மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பிற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும் முக்கியப் பங்காற்றி வருகிறது. குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை, கார் மற்றும் சொர்ணவாரிப் பருவங்களில் மேற்கொள்ளப்படும் நெல் சாகுபடியை ஊக்குவித்து, நெல் உற்பத்தி […]
cm vijay n 1

You May Like