Flash : விருப்ப மனுவுக்கான கால அவகாசம் நீட்டிப்பு.. தவெக தலைமை புதிய அறிவிப்பு..! பரபரக்கும் தேர்தல் களம்..!

tvk viruapa manu

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. பிரதான அரசியல் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.. ஒருபுறம் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன.. அந்த வகையில் முதல்முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறிங்கி உள்ளது..


அதன்படி தவெக சார்பில் விருப்பமனு வழங்கும் பணி கடந்த 6-ம் தேதி தொடங்கியது.. இன்று வரை இந்த விருப்ப மனுக்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.. விருப்ப மனுவில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாகப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் ஒப்படைக்க வேண்டும் எனவும் என்று தவெக தலைமை அறிவித்திருந்தது.

இந்த நிலையில் இந்த நிலையில் தவெகவில் விருப்ப மனு வழங்குவதற்கான கால அவகாசத்தை நீட்டித்து அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. தவெக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் “ வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வேட்பாளராகப் போட்டியிட விரும்பும் கழகத் தோழர்கள் தங்களுக்கான விருப்ப மனுவைப் பெறுவதற்கும் அதனைச் சமர்ப்பிப்பதற்குமான கடைசித் தேதி இன்று (14.02.2026) என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கழகத்தின் பல்வேறு நிகழ்ச்சிகள் காரணமாக, வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் பெரும்பாலான கழகத் தோழர்களால் விருப்ப மனுவைச் சமர்ப்பிக்க முடியாமல் போனதாகத் தெரிவித்து வருகின்றனர். எனவே தோழர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, விருப்ப மனுவைப் பூர்த்தி செய்து அளிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. அதன்படி, வரும் 20ஆம் தேதி (20.02.2026) வரை கழகத் தோழர்கள் தங்களது விருப்ப மனுவைத் தலைமை நிலையச் செயலகத்தில் சமர்ப்பிக்கலாம். விருப்ப மனுக்களைச் சமர்ப்பிக்க அதுவே கடைசி நாள் ஆகும். கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலின் பேரில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Read More : அடிப்படை அறிவைக்கூட நயினார் இழந்துவிட்டார்.. த்ரிஷா குறித்த விமர்சனம்.. நாஞ்சில் சம்பத் பதிலடி..!

RUPA

Next Post

அசாம் தேசிய நெடுஞ்சாலையில் அவரச ரன்வே..! பிரதமர் மோடி திறந்து வைத்தார்..! வடகிழக்கில் இது ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?

Sat Feb 14 , 2026
பிரதமர் நரேந்திர மோடியின் விமானம் இன்று வடகிழக்கு இந்தியாவின் முதல் அவசர விமான இறங்கும் தளத்தில் (Emergency Landing Facility – ELF) தரையிறங்கியது.. அசாம் மாநிலத்தின் மோரன் பகுதியில், விமான படை விமானத்தில் அவர் தரையிறங்கினார். இந்தப் பயணம், வடகிழக்கு இந்தியாவில் இணைப்புத் திறன் மற்றும் வளர்ச்சியை வலுப்படுத்தும் நோக்கில், முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களைத் தொடங்கி வைப்பதும், மூலோபாய வசதிகளை ஆய்வு செய்வதும் ஆகிய நிகழ்வுகளை உள்ளடக்கியதாக இருந்தது. […]
pm modi dibrugarh moran bypass

You May Like