கர்நாடக மாநிலத்தின் மங்களூர் பகுதியில் பிளிப்கார்டில் லேப்டாப் ஒன்றை ஆர்டர் செய்தவருக்கு, பார்சலில் கற்கள் வந்ததால் அதிர்ச்சியடைந்த சம்பவம் நடந்துள்ளது.
மங்களூருவை சேர்ந்த சின்மய ரமணா என்பவர், தீபாவளி பண்டிகையையொட்டி , தன்னுடைய நண்பருக்காக பிளிப்கார்ட் நிறுவனத்தில் லேப் டாப் ஒன்றை ஆர்டர் செய்திருக்கிறார்.
மேலும், சில தினங்களில் அவருக்கு அதுபற்றிய பார்சல் ஒன்றும் வந்துள்ளது. வந்த பார்சலில், லேப் டாப்பிற்கு பதிலாக சிறிய கல் துண்டுகளும்,இ-வேஸ்டுகளும் இருந்துள்ளது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சின்மய ரமணா, இந்த சம்பவம் குறித்து புகைப்பட ஆதாரத்துடன் ப்ளிப்கார்ட் நிறுவனத்திற்கு, இ-மெயில் மூலமாகவும் தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்திலும் இதுபற்றி பதிவிட்டார்.
அவரின் புகாரை ஏற்றுக் கொண்டு, லேப்டாப்பிற்காக செலுத்திய முழு தொகையும் திருப்பி அளிக்கப்படும் என, பிளிப்கார்ட் நிறுவனம் உறுதியாக தெரிவித்துள்ளது.