பொங்கல் திருநாளை ஒட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை…! எப்பொழுது வழங்கப்படும்…?

ration Pongal 2025

பொங்கல் திருநாளை ஒட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை எப்பொழுது வழங்கப்படும்.


தமிழ்நாடு அரசு கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்குவதற்காக கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு பொங்கல் பண்டிகைக்காக விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தினை 1983ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆரால் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வரும் 2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு 1,44,10,000 வேட்டி மற்றும் 1,46,10,000 சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு தயாராக உள்ளது. கைத்தறி மற்றும் துணிநூல் துறை பொங்கல் வேட்டி, சேலை திட்டத்திற்கு சுமார் 4600 மெட்ரிக் டன் நூல் கொள்முதல் செய்ய அரசு டெண்டர் கொடுத்தது. இந்த நிலையில் பொங்கல் திருநாளை ஒட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு நவம்பர் 15 முதல் இலவச வேட்டி, சேலை வழங்கப்படும் என கடந்த மாதம் அமைச்சர் காந்தி தெரிவித்து இருந்தார்.

தமிழக முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பண்டிகைகளுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள இலவச வேட்டி சேலைகளை விநியோகம் செய்யும் பணி எப்பொழுது தொடங்கப்படும் என்று அரசாங்கம் தரப்பிலிருந்து இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை. எனவே இன்று வழங்குவதற்கான வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது.

Vignesh

Next Post

வாகனத்தில் ஃபாஸ்ட்டேக் இல்லை என்றால் அதிக கட்டணம்...! இன்று அமலுக்கு வந்த புதிய நடைமுறை...!

Sat Nov 15 , 2025
தேசிய நெடுஞ்சாலைக் கட்டண (விகிதங்களை நிர்ணயித்தல் மற்றும் வசூலித்தல்) (மூன்றாவது திருத்தம்) விதிகள், 2025, இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட்டேக் இல்லாத பயனர்களிடையே டிஜிட்டல் முறையிலான கட்டணங்களை ஊக்குவிக்கவும், ரொக்கப் பரிவர்த்தனைகளை முற்றிலுமாக அகற்றும் நோக்கில் தேசிய நெடுஞ்சாலைக் கட்டண (விகிதங்களை நிர்ணயித்தல் மற்றும் வசூலித்தல்) விதிகள், 2008-ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. புதிய விதியின்படி, செல்லுபடியாகும் மற்றும் செயல்படும் நிலையில் ஃபாஸ்ட்டேக் இல்லாமல் […]
fastag 2025

You May Like