தமிழக அரசு வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், பெண்களுக்கு உதவும் வகையில் நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இலவசமாக பல்வேறு துறைகளில் நிபுணர்கள் கொண்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு முன்னணி தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படுகிறது. அந்த வகையில் பெண்களுக்கு உதவிடும் அழகுக்கலைப் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அழகுக்கலை என்பது வளர்ந்து வரும் முக்கிய தொழிலாக உள்ளது. சிறிய அளவு முதல் பெரிய அளவு வரை அழகுக்கலை தொழில்கள் விரிவு பெற்றுள்ளன. சர்வதேச அளவில் அதிக வேலைவாய்ப்புகள் கொண்ட கலையாகவும் அழகுக்கலை உள்ளது. அழகுக்கலை கலைஞர் பயிற்சி பெற்று நிறுவனத்தில் அல்லது தனியாகவும் வேலை பார்க்கலாம்.
என்னென்ன பயிற்சிகள்:
திருமண & வரவேற்பு மேக்க்அப் லுக்.
V HD, 3D, 4D மேக்கிஅப் நுட்பங்கள்
ஸ்பெஷல் எஃபெக்ட் (SFX) மேக்க்அப் கலைகள்.
இயற்கை தோற்றம் தரும் பருத்த புரோ வலைகள்.
தோல் உணர்திறன் சோதனை மற்றும் திருத்தம்.
அதிக நுட்பமுள்ள கண் மேக்க்அப் மற்றும் ஹேர் ஸ்டைலிங்.
சேலை அணிவது குறித்த தொழில்நுட்ப பயிற்சி.
தயாரிப்பாளர்கள் தொடர்பு மற்றும் வாடிக்கையாளர் மேலாண்மை.
முழுமையான பயிற்சி (100% ஹான்ட்ஸ்-ஆன்).
வேலைவாய்ப்பு வழிகாட்டி உதவி.
இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் கைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது: 9543773337/9360221280,
இடம்: EDII-TN வளாகம். ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சென்னை – 600 032.இந்த பியற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இந்த பயிற்சியில் கலந்து கொள்ள முன்பதிவு அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more: திண்டுக்கல் மாவட்ட பாமக நிர்வாகிகள் கூண்டோடு மாற்றம்..!! – ராமதாஸ் அதிரடி