கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சானசத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் முபாரக் இவர் ஓசூரில் வெல்டிங் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இத்தகைய நிலையில், இவர் சில நாட்களுக்கு முன்னர் ஓசூர் ஆர்பி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் எதிரே இருக்கின்ற எம்ஜிஆர் சந்தையில் ஒரு கட்டிடத்தின் மாடியில் மது பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்தார். இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர்.
மது சாப்பிடும் போது உண்டான தகராறு காரணமாக, அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற விதத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அவர்களுடைய விசாரணையை தீவிர படுத்திய சமயத்தில் அவருடைய நண்பர்களே ஒன்று இணைந்து மதுபாட்டினால் அவரை குத்தி கொலை செய்திருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியானது.
அதாவது கிருஷ்ணகிரி ஓசூர் பகுதியை சேர்ந்த கலீல், அப்துல், ரஹீம், முபாரக், இம்ரான், முகமது இலியாஸ் கொலை செய்யப்பட்ட முபாரக் உள்ளிட்டோர் நண்பர்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், கலிமுல்லா முபாரக் உள்ளிட்ட இருவரும் வழிப்பறி இருசக்கர வாகனத்திற்கு உள்ளிட்ட வழக்குகளின் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் வழிப்பறி செய்யும் பணத்தில் நண்பர்கள் மது அருந்தி சொகுசாக இருந்து வந்துள்ளனர். பல வழக்குகளில் சிக்கி அவ்வப்போது அவர்கள் இருவரும் சிறைக்கு சென்று வந்துள்ளனர்.
அந்த வகையில், சமீபத்தில் கலிமுல்லா சிறைக்கு சென்ற போது கொலை செய்யப்பட்ட முபாரக் உதவி செய்ய முன்வரவில்லை என்ற கோபத்தில் நண்பர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. சிறைக்கு சென்று திரும்பிய பிறகு அவரை முபாரக் தொடர்ந்து கேலி செய்து வந்ததாக சொல்லப்படுகின்றது. இதன் காரணமாக, ஆத்திரம் கொண்ட நண்பர்கள் அவரை கொலை செய்ய திட்டமிட்டனர். அதன்படி ஓசூர் எம்ஜிஆர் சந்தை பகுதிக்கு அவரை வரவழைத்து மது ஊற்றி கொடுத்து இருக்கிறார்கள்.
அதன் பிறகு போதை தலைக்கு ஏறிய நிலையில், பீர் பாட்டிலால் அடித்தும், புத்தியும் அவரை கொலை செய்திருக்கிறார்கள் என்பது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 6 குற்றவாளிகளையும் ஓசூர் நகர காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்திருக்கிறார்கள்.