TATA to BMW வரை..!! லோகோக்களில் இடம்பெற்றிருக்கும் நீல நிறம் பற்றிய ரகசியம் தெரியுமா..?

இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் (Tata Motors), அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு (Ford) மற்றும் ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ (BMW) போன்ற நிறுவனங்கள் உலக கார் சந்தையில் மிகவும் முக்கியமான இடத்தை வகித்து வருகின்றன. இந்நிறுவனங்களின் லோகோக்களை நன்றாக கவனித்தால், ஒரு ஒற்றுமை இருப்பது உங்களுக்கு தெரியவரும். நீல நிறம்தான் அந்த ஒற்றுமை. ஆம், டாடா மோட்டார்ஸ், ஃபோர்டு மற்றும் பிஎம்டபிள்யூ போன்ற நிறுவனங்களின் லோகோக்களில் நீல நிறம் இருக்கும். கார் நிறுவனங்கள் மட்டுமல்லாது, ஃபேஸ்புக் போன்ற உலகின் முன்னணி நிறுவனங்கள் பலவற்றின் லோகோவும் நீல நிறத்தில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது.


பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பில் வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் ஏன் நீல நிறத்திற்கு அதிக முக்கியத்துவம் தருகின்றன என்பது உங்களுக்கு தெரியுமா? உலகின் முன்னணி நிறுவனங்களின் லோகோக்கள் ஏன் பெரும்பாலும் நீல நிறத்தில் உள்ளன? என்ற கேள்விக்கான விடையை இந்தப் பதிவில் பார்க்கலாம். ஒவ்வொரு நிறத்திற்கும் மனிதர்களின் மனது வெவ்வேறு வகையில் வினையாற்றும் என்பது அறிவியல் ஆராய்ச்சிகளில் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு நிறமும், ஒவ்வொரு வகையான உணர்வை மனிதர்களின் மனதில் ஏற்படுத்தும். நாம் இங்கே உதாரணத்திற்கு சிகப்பு நிறத்தை எடுத்து கொள்ளலாம்.

சிகப்பு நிறமானது, போர், ரத்தம், கோபம் மற்றும் வன்முறை போன்றவற்றை அடையாளப்படுத்துகிறது. சிகப்பு நிறம் என்றாலே, இவை எல்லாம்தான் நம் நினைவிற்கு வரும். எனவே, சிகப்பு நிறத்தை பார்ப்பவர்களின் மனதில் ஒரு வித பயம் தோன்றும். மறுபக்கம் நீல நிறமானது, அமைதி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை குறிக்கிறது. நீல நிறத்தை பார்ப்பவர்களின் ரத்த அழுத்தம் குறைவது ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது. எனவே நீல நிறத்தை பார்ப்பவர்கள், பாதுகாப்பான மற்றும் சௌகரியமான உணர்வை பெறுகிறார்கள். முன்னணி நிறுவனங்கள் பலவும் தங்கள் லோகோக்களில் நீல நிறத்தை பயன்படுத்துவதற்கு இதுவே முக்கியமான காரணம்.

பாதுகாப்பான உணர்வு வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. ஒரு வணிகம் வெற்றி பெற வேண்டுமென்றால், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவது அவசியம். எனவேதான் உலகின் முன்னணி நிறுவனங்கள் நீல நிறத்திற்கு அதிக முக்கியத்துவத்தை வழங்கி வருகின்றன. முன்னணி நிறுவனங்களின் நீல நிற லோகோக்களுக்கு பின்னால் இன்னொரு காரணமும் இருக்கிறது. ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல், உலக மக்கள் பலரின் விருப்பமான நிறமாக நீலம் இருப்பதுதான். ட்யூலக்ஸ் (Dulux) பெயிண்ட் (Paint) நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், 42 சதவீத ஆண்களும், 30 சதவீத பெண்களும் நீல நிறம்தான் தங்களுக்கு மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளனர்.

CHELLA

Next Post

பத்திரப்பதிவுக்கு லஞ்சம் கேட்ட அதிகாரி….! கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர்…..!

Sat May 6 , 2023
சென்னை குறளகம் வளாகத்தில் இருக்கின்ற பத்திரப்பதிவுத்துறை ஐஜி கட்டுப்பாட்டில் மாற்றுப் பாத்திரப்பதிவு உதவி செயல் பொறியாளர் அலுவலகம் ஒன்று செயல்படுகிறது. சார்பதிவாளர் அலுவலகங்களில் இருந்து அனுப்பப்படும் விற்பனை பத்திரங்கள் இங்கே ஆய்வு செய்யப்பட்ட பிறகு தான் அதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. இத்தகைய நிலையில், இந்த அலுவலகத்தில் உதவி செயல் பொறியாளராக பணியாற்றி வந்த ரமேஷ் மற்றும் இளநிலை உதவியாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் கூடுவாஞ்சேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் […]
இதுக்கா இப்படியொரு தண்டனை...மகனுக்கு சூடு போட்டு; கண்ணில் மிளகாய் பொடியை தூவிய கொடூர தாய்...கேரளாவில் பயங்கரம்!

You May Like