ஐபிஎல்லில் ஆர்சிபி வெற்றி பெற்ற பிறகு, சின்னசாமி மைதானத்தில் ஒரு வெற்றி அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் சோகத்தையும் அதிச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது இது முதல் முறையல்ல. கோயில்களில் நெரிசல் ஏற்பட்டு பலர் உயிரிழந்த சம்பவங்கள் இதற்கு முன்னரும் நடந்துள்ளன. அவ்வாறு சமீபத்திய ஆண்டுகளில் நடந்த சம்பவங்கள் பற்றி பார்க்கலாம்.
மகா கும்பமேளா: சமீபத்தில், பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளாவின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. சங்கம் நோஸ் பகுதியில் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஜனவரி 28 ஆம் தேதி இரவு சுமார் 1:30 மணியளவில் கூட்ட நெரிசல் தொடங்கியது, அதில் சுமார் 30 பேர் இறந்தனர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மந்தர்தேவி கோவில் கூட்ட நெரிசல்: 2005 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி, மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்திற்கு அருகிலுள்ள மந்தர்தேவி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 340க்கும் மேற்பட்ட பக்தர்கள் இறந்தனர். தேங்காய் உடைக்க பக்தர்கள் கோவிலின் படிக்கட்டுகளில் ஏறியபோது இந்த விபத்து ஏற்பட்டது.
இமாச்சலப் பிரதேசம் கூட்ட நெரிசல்: ஆகஸ்ட் 3, 2008 அன்று, இமாசல பிரதேசத்தின் பிலாஸ்பூர்மாவட்டத்தில் உள்ள நைனா தேவி கோயிலில் பாறைகள் சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட நெரிசலில் 162 பேர் உயிரிழந்தனர்.
ராஜஸ்தான் கூட்ட நெரிசல்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரி நக உள்ள சாமுண்டா தேவி கோயிலில் வெடிகுண்டு வெடித்ததாக வதந்தி பரவியதால் ஏற்பட்ட நெரிசலில் 250 பக்தர்கள் பலியாகினர்.
ஹத்ராஸ் ஆன்மீக சொற்பொழிவு: உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி நடந்த ஆன்மிக சொற்பொழிவுக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் சோகத்தையும் அதிச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.