பஞ்சாப் மாநிலத்தை இந்தியாவிலிருந்து பிரித்து காலிஸ்தான் என்ற தனிநாட்டை உருவாக்கி தர வேண்டும் என்ற கோரிக்கை இந்திரா காந்தி காலத்தில் இருந்து நீடித்து வருகிறது. இதனை தங்களுடைய கொள்கையாக வைத்துக் கொண்டு ஒரு சில சிக்கிய அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த காலிஸ்தான் இயக்கத்தின் தீவிர முகமாக சமீப காலமாக இருந்து வரும் நபர் தான் அம்ரித் பால்சிங்.
சென்ற மாதம் இவருடைய ஆதரவாளர்கள் ஒரு சிலர் ஆள் கடத்தல் வழக்கில் பஞ்சாப் மாநில காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அப்போது அம்ரித்பால்சிங் அந்த காவல் நிலையத்திற்குள் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்து காவல் நிலையத்தை சூறையாடி தன்னுடைய ஆதரவாளர்களை காப்பாற்றி சென்றார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது.
அம்ரித் பாலை கைது செய்யும் நடவடிக்கையில் இதற்கு பின்னர் பஞ்சாப் மாநில காவல்துறை தீவிரம் காட்டி வந்தது. இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 18ஆம் தேதி இதில் முழுமூச்சுடன் இறங்கியது பஞ்சாப் மாநில காவல்துறை ஆனால் அம்ரிபால் சிங் தலைமறைவாளர். அவருடைய முக்கிய கூட்டாளிகள் மற்றும் வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பைச் சேர்ந்த பலரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
இந்த சூழ்நிலையில், அம்பரித் பால் சிங் அனந்த்ப்பூர் கால்சா பவுஜ் என்ற பெயரில் தீவிரவாத குழுவை ஏற்படுத்தும் முயற்சிகளும் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆகவே அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வந்தார்கள். அதோடு அவர் நடமாடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை உண்டாக்கியது.
ஆனாலும் பஞ்சாப் மாநில காவல் துறை அவரை தேடும் முயற்சியில் தீவிரமாக இருந்தது. இந்த நிலையில் தான் காவல்துறையிடம் இருந்து தப்பிச் சென்ற அம்ரித்பால்சிங் மேகாவின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக காவல்துறை வட்டாரங்களில் இருந்து நம்பத் தகுந்த தகவல் கிடைத்திருக்கிறது.சுமார் ஒரு மாத கால தலைமுறைகளுக்கு பின்னர் அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது