Chennai: கேலோ இந்தியா திறனறியும் போட்டி இன்று தொடக்கம்…!

விளையாட்டுக்களில் திறமையான இளம் வீரர்களை அடையாளம் கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் விதமாக, கேலோ இந்தியா திறனறியும் போட்டி நிகழ்வுகள் சென்னையில் நடைபெறவுள்ளது.

மத்திய அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய விளையாட்டு ஆணையம் இந்தப் போட்டிகளை நாளை முதல் வரும் 27-ம் தேதி வரை சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்துகிறது. இன்று சைனி வில்சன் தலைமை விருந்தினராக இதில் கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கிறார்.

இன்று தடகளம், 23-ம் தேதி குத்துச்சண்டை, 24-ம் தேதி வாலிபால், 25-ம் தேதி கால்பந்து, 26-ம் தேதி கபடி, 27-ம் தேதி கோ-கோ ஆகிய விளையாட்டுகளில் திறன் பெற்றவர்களைத் தேர்வு செய்யும் போட்டிகள் நடைபெறும். 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை காலை 7 மணி முதல் விளையாட்டுகள் தொடங்கும். இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை இளம் வீரர்கள் வெளிப்படுத்தி, பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு http://mybharat.gov.in/ என்ற தளத்தை அணுகவும்.

Vignesh

Next Post

’உனக்கு சம்பளத்தவிட மேல போட்டு தர்றேன்’..!! ’என்கூட வந்து’..!! போலீசிடம் பெண் பரபரப்பு புகார்..!!

Mon Apr 22 , 2024
தாம்பரம் அருகே மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். சென்னை மண்ணிவாக்கத்தை சேர்ந்த வடிவாம்பிகை (46) என்ற பெண் சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளருக்கு பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், சென்னை – 600083, காசி டாக்கீஸ் 3-வது மாடியில் இருக்கும் long drive Restro bar and Restuarent-ல் பெண் பௌன்சர் வேலைக்கு என்னை சேர்த்து முதலாளி என்று கூறிக் […]

You May Like