ஜூலை 17-ம் தேதி பொதுப்பிரிவு பொறியியல் கலந்தாய்வு.. தரவரிசைப் பட்டியல் வெளியீடு..

TNEA Admissions 2025 06 c78b4ec9fc56719a308193e652c739b3 3x2 1

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 14ம் தேதி தொடங்கி 17-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள சுமார் 445 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பிடெக் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. இந்த கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் சுமார் 2 லட்சம் உள்ளன.


நடப்பு கல்வியாண்டில் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த மே 7-ம் தேதி தொடங்கி, கடந்த 6-ம் தேதி முடிவடைந்தது.. அதன்படி 3,2374 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 2,49000 பேர் கட்டணம் செலுத்தி உள்ளனர். அதில் 2,26,000 பேர் உரிய சான்றுகளை பதிவேற்றி உள்ளனர்.. கடந்த 11-ம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்பட்ட நிலையில், இன்று தரவரிசை பட்டியல் வெளியிடம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் 2025-26 ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி செழியன் வெளியிட்டார். சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜூலை 7-ம் தேதி சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் “ பொறியியல் தர வரிசைப்பட்டியலில் 145 பேர் 200-க்கு 200 கட் ஆஃப் எடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 14ம் தேதி தொடங்கி 17-ம் தேதி வரை நடைபெறும். சிறப்பு பிரிவுக்கான கலந்தாய்வு ஜூலை 7-ம் தேதி தொடங்கும். 7.5 இட ஒதுக்கீட்டின் கீழ் கடலூரை சேர்ந்த தரணி என்ற மாணவி முதலிடம் பிடித்துள்ளார்” என்று தெரிவித்தார்.

Read More : மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்வதற்கு முன்பு பிறப்பு சான்றிதழ் வழங்க வேண்டும்..!! – RGI புதிய உத்தரவு

RUPA

Next Post

ஆன்லைனில் ஷாப்பிங் செய்வோர் உஷார்.. புது ஸ்கேம் அலர்ட்..!! மோசடி வலையில் சிக்காமல் இருப்பது எப்படி..?

Fri Jun 27 , 2025
இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் வேகமாக வளர்ந்து வருகிறது. இது நுகர்வோருக்கு மிகுந்த வசதியை வழங்கும் அதே வேளையில், மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான மக்கள் ஷாப்பிங்கிற்காக டிஜிட்டல் தளங்களை நோக்கித் திரும்புவதால், சைபர் குற்றவாளிகள் அவர்களை குறிவைத்து புதிய மோசடிகளைச் செய்கிறார்கள். மத்திய உள்துறை அமைச்சகம் தனது ‘சைபர் தோஸ்த்’ விழிப்புணர்வு திட்டத்தின் மூலம் ஒரு முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. போலி வலைத்தளங்கள், ஃபிஷிங் செய்திகள் […]
onlin shopping

You May Like