தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 14ம் தேதி தொடங்கி 17-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள சுமார் 445 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பிடெக் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. இந்த கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் சுமார் 2 லட்சம் உள்ளன.
நடப்பு கல்வியாண்டில் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த மே 7-ம் தேதி தொடங்கி, கடந்த 6-ம் தேதி முடிவடைந்தது.. அதன்படி 3,2374 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 2,49000 பேர் கட்டணம் செலுத்தி உள்ளனர். அதில் 2,26,000 பேர் உரிய சான்றுகளை பதிவேற்றி உள்ளனர்.. கடந்த 11-ம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்பட்ட நிலையில், இன்று தரவரிசை பட்டியல் வெளியிடம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் 2025-26 ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி செழியன் வெளியிட்டார். சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜூலை 7-ம் தேதி சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் “ பொறியியல் தர வரிசைப்பட்டியலில் 145 பேர் 200-க்கு 200 கட் ஆஃப் எடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 14ம் தேதி தொடங்கி 17-ம் தேதி வரை நடைபெறும். சிறப்பு பிரிவுக்கான கலந்தாய்வு ஜூலை 7-ம் தேதி தொடங்கும். 7.5 இட ஒதுக்கீட்டின் கீழ் கடலூரை சேர்ந்த தரணி என்ற மாணவி முதலிடம் பிடித்துள்ளார்” என்று தெரிவித்தார்.