கோவை சுந்தராபுரம் காந்தி நகரைச் சேர்ந்தவர் பிரசாந்த் (21) லோடுமேன் ஆக இவர் பணிபுரிந்து வருகிறார் இவரும் செட்டிபாளையம் அருகே உள்ள மயிலாடும்பாறை சேர்ந்த தன்யா (18) என்ற பெண்ணும் கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்தனர் இவர்களின் காதல் விவகாரம் இரு குடும்பத்தினருக்கும் தெரிய வந்தது. ஆகவே அவர்கள் சில வருடங்களுக்கு காத்திருக்குமாறு இருவரையும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கடந்த 5ம் தேதி தன்யாவுக்கு பிறந்தநாள் ஆகவே அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதற்காக அன்று அதிகாலை பிரசாந்த் தன்னுடைய நண்பர்களுடன் மது போதையில் தன்யாவின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவருக்கும் தன்யாவின் குடும்பத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக, ஆத்திரம் கொண்ட தன்யாவின் உறவினர் விக்னேஷ் என்பவர் அறிவாளால் பிரசாந்தை வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த பிரஷாந்த் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து செட்டிபாளையம் காவல்துறையினர் வடக்கு பதிவு செய்து விக்னேஷை கைது செய்தனர்.
பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதற்காக வந்த காதலன் உயிரிழந்த சோகத்தில் இருந்த தன்யா, அதற்கு அடுத்த நாள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார். ஆனால் குடும்பத்தினர் அவரை விட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகள் அனுமதித்தனர். அதன் பிறகு தன்யா வீடு திரும்பினார்.
இத்தகைய நிலையில், தான் நேற்று முன்தினம் தன்யா மற்றும் அவருடைய பாட்டி உள்ளிட்டோர் மட்டுமே வீட்டில் தனியாக இருந்துள்ளனர். காதலன் உயிரிழந்த சோகத்தில் இருந்த தன்யா, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டா.ர் இது தொடர்பாக தகவல் அறிந்த செட்டிபாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் எழுதி வைத்த கடிதத்தையும் காவல்துறை நான் கைப்பற்றிய உள்ளனர். இந்த சம்பவம் குறித்து செட்டிபாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.