மே 29 ஆம் தேதியான இன்று விலை குறைய வாய்ப்பு இருக்கிறதா என்ற எதிர்பார்த்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது.
இந்திய மக்களின் சேமிப்பிலும் தங்கம் முதலிடம் வகிக்கிறது. அப்படியிருக்கையில், நாளுக்கு நாள் அதிகரிக்கும் தங்கத்தின் விலை, நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தங்கள் பெண் பிள்ளைகளின் திருமணத்திற்கு நகை சேர்க்கும் பெற்றோர்கள், நிலைக்குலைந்து போயுள்ளனர்.
சர்வதேச சந்தையில் விலை உயர்வு, புவியியல் சூழல், நாடுகளுக்கிடையேயான போர் பதற்றம் மற்றும் மத்திய வங்கிகளின் வட்டி விகிதங்கள் போன்ற பல காரணிகள் தங்கத்தின் விலை உயர காரணம். இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பால், உலகம் முழுவதும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் உருவாகி தங்கம் விலை மேலும் உயர்ந்தது. இதையடுத்தும் இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றமும் தங்கம் விலையில் எதிரொலித்தது.
தங்கம் விலை இதுவரை இல்லாத அளவாக ஒரு சவரன் ரூ.72,000ஐ தாண்டி புது வரலாறை படைத்தது. அதன்பிறகு விலை ஏறுவதும், இறங்குவதுமாக போக்கு காட்டி வந்தது. மே 28 ஆம் தேதியான நேற்று தங்கம் விலை வரனுக்கு ரூ. 480 குறைந்ததால் நகைப்பிரியர்கள் நிம்மதி அடைந்தனர். இன்று விலை குறைய வாய்ப்பு இருக்கிறதா என்ற எதிர்பார்த்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி இன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.71,160 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ. 8,895-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.320குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.71,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.111க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,11,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து ஏழாவது நாளாக அதாவது மே 23ஆம் தேதி முதல் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.111 ஆகவே நீடிக்கிறது.
Read more: வளர்ப்பு தாயை காதலித்த முகலாய பேரரசர்.. அக்பர் வழங்கிய கொடூர தண்டனை..!! பலருக்கு தெரியாத தகவல்..